1. Home
  2. ஜோதிடம்

NewsTM இந்த வார ராசிபலன்கள்! அக்டோபர் 07 முதல் அக்டோபர் 13 -ம் தேதி வரை

NewsTM இந்த வார ராசிபலன்கள்! அக்டோபர் 07 முதல் அக்டோபர் 13 -ம் தேதி வரை

newstm-weekly-astrology

NewsTM இந்த வார ராசிபலன்கள்! அக்டோபர் 07 முதல் அக்டோபர் 13 -ம் தேதி வரை

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அக்டோபர் 07 முதல் அக்டோபர் 13 வரையிலான வார பலன்

இந்த வார கிரக மாற்றங்கள்:

07.10.2018 அன்று இரவு 9.01 மணிக்கு சந்திர பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்

09.10.2018 அன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறுகிறார்

12.10.2018 அன்று காலை 7.27 மணிக்கு சந்திர பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்

உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) ஏற்றமும் மாற்றமும் சந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மன நிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை சரியாகும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேரும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி மகிழ்வீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.  தொழிலில் இதுவரை விரையமான பணம் திரும்ப கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பீர்கள்.  உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை வரவேண்டிய பணம் வந்து சேரும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். அது உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும்.  பெண்களுக்கு காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். காரியத்தடைகள் விலகும். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு நீங்கள் உங்கள் பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.  பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வர உங்களுக்கு வர இருக்கும் அவமானங்களைத் தவிர்க்கலாம். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) தடைகளைத் தகர்த்தெறியும் தன்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மனம் தளர வேண்டாம். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெரும். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது இருக்கும். உங்கள் மனம் தெளிவடையும். பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உங்கள் முன் வரும். அதை பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம், வாகனம் போன்ற நீங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.  தொழிலில் இருந்து வந்த மந்தநிலை மாறி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். இழுபறியாக இருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். ஆர்டர் இல்லை என திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள். ஏற்றுமதி -  இறக்குமதி தொழிலில் நல்ல லாபத்தைக் காண முடியும்.  உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும்  அவர்கள் பதவிஉயர்வுக்கான தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும்.  பெண்களுக்கு சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். திருமண வாழ்வில் விவகாரத்து வரை சென்றவர்கள் கூட பிரச்சினைகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்புள்ளது.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பழகும் போது சற்று எச்சரிக்கையுடன் பழகி வாருங்கள்.  பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹாலட்சுமிக்கு மல்லிகை மலர் அர்பணித்து வர வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள் குறையும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிமிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) சாதுர்யமிக்க பேச்சால் அனைவரையும் கவரும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி  மகிழ்வீர்காள். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்த நோய் குணமாகும்.  தொழிலில் இது வரை இருந்த தடைகள் விலகும். உங்கள் தொழிலின் உச்சத்தை நீங்கள் அடைய வழி கிடைக்கும். உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இது வரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும்.  உத்யோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பிய படியே கிடைக்கும். கவலை வேண்டாம்.  பெண்கள் சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த நிலை மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலை வேண்டாம்.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்க்கும். பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும்.  பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட பெரும் நோய்களினால் பாதிக்காமல் காக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) சங்கடங்களை நீக்கி சாதனை படைக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். உடல்நிலையினை நன்றாக கவனிக்கும் எண்ணம் தோன்றும். தூக்கத்தில் இருந்த தடைகள் விலகும்.  குடும்பத்தில் பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள் வரிசையாக நடக்கும். பண வரவும் சீராக இருக்கும் என்பதால் அவற்றை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.  தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். சோம்பல் இன்றி உழைக்கும் எண்ணம் தோன்றும். இதனால் உற்பத்தி அதிகமாகும். உங்களின் உயர்வும் சிறப்பாக இருக்கும். தைரியமாக எதையும் கையாளுவீர்கள்.  உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதனால் மேலிடம் உங்களின் மேல் வைத்திருந்த தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பாக அமையும்.  பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். நஷ்டத்தில் தொழில் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொல்லைகள் அகலும்.  மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவடையுங்கள். மேனேஜ்மெண்ட் சம்பந்தமான படிப்புகளில் சிறந்து விளங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள்.  பரிகாரம்: அம்பாளுக்கு மல்லிகை மலர் சாற்றி வழிபட பூர்வீக சொத்துக்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனிசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) தொட்டதில் எல்லாம் வெற்றியினைக் காணும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களைப் புரிந்து கொள்ளாமல் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தெளிவாகும். இதனால் மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், கணவன் - மனைவியிடையே சரியான புரிதல் இல்லாமை போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட அவமானங்கள் மாறும். மனதில் நிம்மதி பிறக்கும். இதனால் நிம்மதியான தூக்கம் வரும். கவலை வேண்டாம். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார். தாய் தாய்வழி உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் அகலும்.  தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்டிருந்த தொய்வுகள் அகலும். நிறைய போராட்டத்திற்கு பிறகு நல்ல செய்திகள் தொழிலில் கிடைக்கப் பெறுவீர்கள்.  உத்யோகஸ்தர்கள் தங்கள் உடன் பணி புரிபவர்களிடம் கவனமாகப் பழகவும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் போதும் கவனம் அவசியம். நீங்களே முன் சென்று என்னால் செய்ய முடியும் என்று உறுதி கொடுக்காதீர்கள்.  பெண்களைப் பொறுத்த வரை வேலை செய்யும் பெண்கள் லாபமடைவார்கள். வேலை சூழல் உங்களுக்கு ஏற்றதாக அமையும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிறு சிறு தொந்தரவுகள் தானாக மறையும்.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மேல்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும்.  பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வம் அர்ப்பணித்து வழிபட வாகனம் சம்பந்தமாக இருக்கும் தடை அகலும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) நினைத்ததையெல்லாம் முடிக்க நினைக்கும் கன்னிராசி அன்பர்களே, இந்த வாரம் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் விலகி இன்பமாக வாழ வழிபிறக்கும். இளைய சகோதரர்களிடையே இருந்த சண்டைகள், பிளவுகள் காணாமல் போகும். தந்தை வழியே வர வேண்டிய சொத்துகள், பிதுர் ராஜ்ஜிய சொத்துகளிலிருந்த பாகப் பிரிவினைகல் எந்த பிரச்சினையின்றி தீரும். வழக்குகள் ஏதாவது நடைபெற்றுக் கொண்டிருக்குமாயின் உங்களுக்கு சாதகாம தீர்ப்புகள் வரும்.  தொழிலிலைப் பொறுத்தவரை சற்று மந்தநிலை காணப்பட்டாலும் சில வெற்றிகள் உண்டாகும். வரவேண்டிய பணம் சிறிது தடைகளுக்குப் பிறகு வந்து சேரும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பிரச்சினைகள் வந்து போகும். நம்பிக்கையாக யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம். வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் அன்பர்கள் இப்போது அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.  பெண்களுக்கு திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன்கள் அமையப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களுக்கு பார்த்து பார்த்து செய்வார்கள். கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும்.  மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேற்படிப்பில் அக்கறையுடன் படித்தால் மட்டுமே நல்ல வேலை எதிர்காலத்தில் அமையும். ஆசிரியர்கள் உங்களை சிறப்பாக வழி நடத்துவார்கள்.  பரிகாரம்: விஷ்ணுவிற்கு மல்லிகை மலர் அர்ப்பணித்து வணங்க சகோதரர்களிடம் இருக்கும் மனசங்கடங்கள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிதுலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) நியாயத்தை உயிரென நினைக்கும் துலாராசி அன்பர்களே, இந்த வாரம் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும். குடும்பத்தை பொறுத்தவரையில் வாக்கில் வன்மையும், பேச்சில் நிதானமும், செல்வாக்கும் அமையப் பெறுவீர்கள். குடும்பம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். தந்தையாரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் மட்டும் சனியில் பார்வையால் அவ்வப்போது வந்து போகும்.  தொழிலைப் பொறுத்தவரையில் தொழில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான லாபம் கிடைக்கும். தொழிலுக்கு தேவையான நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும்.  உத்யோகஸ்தர்களுக்கும் வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இருந்து வந்த மன வருத்தங்கள் அகலும். உடல் ஆரோக்கிய குறைவால் வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்கள் இப்போது வேலைக்குச் செல்வார்கள்.  பெண்களுக்கு சோம்பல் குறையும். உடலில் இருந்து வந்த சில குறைபாடுகளும் அகலும். அதனால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்களை அவமதித்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மன்னிப்பும் கேட்பார்கள்.  மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் எதிரியாய் நினைத்தவர்கள் கூட உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள். கல்விக்காக வாங்கிய கடன் அடையும். உங்களின் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும்.  பரிகாரம்: மஹாலட்சுமிக்கு தாமரை மலர் அர்ப்பணிக்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளிவிருச்சிகம்:(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) செயலில் நிதானத்துடன் இருக்கும்  விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் உற்றார், உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். அது சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். கணவன் - மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் அகலும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். உங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  தொழில் - வியாபாரம் எப்போதும் போல் இருக்கும் என்றாலும் உங்களின் இடைவிடாத முயற்சியால்  லாபம் பெறலாம். எதிர்பார்த்த லாபம் இல்லை என்று மனம் கலங்க வேண்டாம். நஷ்டம் இல்லாமல் தொழில் செய்ய பகவான் அருள் புரிவார்.  உத்யோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளியில் கொடுத்த பணம் சில அலைச்சல்களுக்குப் பின் கிடைக்கும். சக ஊழியருடன் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடவேண்டாம். கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.  பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். பெற்றோர்களின் தொழிலைப் படிப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நன்றாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிறந்த குரு கிடைப்பார்.  பரிகாரம்: முருகப்பெருமானுக்கு அரளி மாலை சாற்றி வழிபட மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)     அமைதியாகச் செயல்பட்டு ஆனந்தம் காணும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம், பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.   குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உங்கள் பேச்சைக் கேட்காதவர்களும் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். தாயார் தாய் வழி உறவினர்கள் உங்களுடன் உறவாட வரலாம். அவர்களுடனான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். உங்கள் மனதில் இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  தொழில் - வியாபாரத்தைப் பொறுத்தவரை சில புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அவை பிற்காலத்தில் லாபம் தரக்கூடியனவாகவே இருக்கும். கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்திருந்த கடன் கிடைக்கும். இதன் மூலம் தொழிலை விரிவு செய்வீர்கள். உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள்.  உத்யோகஸ்தர்களுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சில காலம் வெளியூரில் தங்க நேரிடலாம். உடல் நிலையில் இருந்து வந்த பின்னடைவு சரியாகும்.  பெண்களுக்கு காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய் வழி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். தீராத நோயினால் அவதிப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.  மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கல்விக் கடன் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் படிப்பிற்காக விலை உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.  பரிகாரம்: நவகிரக குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபட தூக்கத்தில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளிமகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)     பொறுமையால் பெருமையடையும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பம் மற்றும் தெய்வீக காரியங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். பிடித்தமானவர்களை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள். தொழில் - வியாபாரம் சிறப்பான முறையில் நடைபெறும். தொழிலில் எந்த வித இடையூறும் இருக்காது. நீங்கள் நினைத்த லாபம் கிடைக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.  உத்யோகஸ்தர்களுக்கு உங்களின் சிறந்த பணிக்கான விருதுகள் கிடைக்கப் பெறுவார்கள். மேலிடம் உங்களை பாராட்டும் அளவிற்கு உங்கள் வேலை இருக்கும். பண உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  பெண்களுக்கு சின்ன சின்ன உதவிகள் தாராளமாக கிடைக்கப் பெறுவீர்கள். தேவையான பொருள்களுக்கு தடை வராது. கணவன் - மனைவிக்கிடையே சின்ன சின்ன ஊடல்கள் வந்து போகும்.  மாணவர்களுக்கு படிப்பில் கவனக் குறைவு ஏற்படும். கனவுகளுக்கு இடம் கொடுக்காமல் என்ன நிஜம் என்பதை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைக்கும் அது வெற்றியைக் கொடுக்கும்.  பரிகாரம்: சிவபெருமானை வழிபட பணம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனிகும்பம்:  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்) உழைப்பினால் முன்னேற்றத்தைக் காண துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.   குடும்பத்தைப் பொறுத்தவரை குடும்பம் சுபிட்சமாகவும் , ஆனந்தமாகவும் இருப்பதில் எந்த ஐயமும் இல்லை. குடும்பத்தில் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். அனைவரும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளது. செல்வாக்கும், சொல்வாக்கும் மிகுதியாகும்.  தொழிலில் எந்த ஒரு பிர்ச்சினைகளும் இருக்காது. சக பங்குதாரர்களும் உங்கள் பேச்சில் கட்டுப்பட்டு இருப்பார்கள். ஒத்துழைப்பு கொடுத்து புதிய விஸ்தரிப்புகளும் செய்யும் அளவிற்கு உங்களுக்கு மனதை திருப்தி படுத்துவார்கள். சிறு வியாபாரிகள் கூட நல்ல லாபத்தைப் பெற்று வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். வேலையில் உங்களுக்கு  இருந்த சத்ருகள் விலகி விடுவார்கள். நண்பர்கள் போல மாறி உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பார்கள். சக பணியாளர்களின் ஆதரவும், உதவியும் உங்களுக்கு கிடைப்பதால் நீங்கள் வேலையை சுலபமாக செய்து முடிப்பீர்கள்.  பெண்கள் வேண்டிய வசதிகள் குடும்பத்தில் கிடைக்கும். அனைத்து வசதிகளும் கேட்காமலேயே கிடைப்பதால் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். மாமியார் -மருமகள் அமைதியான சூழ்நிலை உண்டாகும்.  மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் உண்டாகும். குறித்த நேரத்தில் அனைத்து பாடங்களையும் கற்று ஆசிரியர் பாராட்டைப் பெறுவீர்கள். அதிகாலை எழுந்து பாடங்களை படிப்பதே சிறந்தது என்பதை   மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.  பரிகாரம்: முன்னோர்களை வழிபட வேலையில் இருக்கும் பிரச்ச்சனைகள் அனைத்தும் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிமீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கவனமாகச் செயல்பட்டு கஷ்டங்களை விலக்கிக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம்.  குடும்பத்தைப் பொறுத்தவரை தன்னுடைய புத்தியில் அனைவருக்கும் அறிவுரை செய்து கொண்டிருப்பீர்கள். மிகவும் அழகான தோற்றப் பொலிவுடன் காணப்படுவீர்கள். தீடீரென புதிதாக ஆடை வாங்கி உடுத்திக் கொள்வீர்கள். நல்ல குணநலன்களை பின்பற்றுவீர்கள். உங்களுக்கு எந்தக் காரியத்திலும் தைரியமாக இறங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். காரியத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்து வருவீர்கள்.  தொழிலைப் பொறுத்தவரை நல்ல முக்கியஸ்தர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்படலாம், அது உங்கள் தொழிலின் வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். உத்தியோகஸ்தர்கள் பலரது பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனக்கவலைகளை மறந்து உற்சாக மிகுதியாக காணப்படுவீர்கள். சிலருக்கு தந்தை பார்த்து வந்த வேலை அவரது ஓய்வுகாலத்திற்கு பிறகு உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அதற்கான முயற்சியை நீங்கள் செய்யுங்கள்.  பெண்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆடை, நிறைய தங்கம் போன்றவை சேரும். சிலர் புதிய சேமிப்பை துவங்குவீர்கள். குடும்பத்திற்கான எதிர்கால நற்திட்டங்களை திட்டம் போட்டு செய்வீர்கள்.  மாணவர்கள் தைரியமாகவும், தெளிவாகவும் இருப்பார்கள். கல்வியில் இருந்து வரும் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளை எதிர்கொள்ளும் போது மனதில் திடமும், தைரியமும் உண்டாகும்.  பரிகாரம்: பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

newstm.in

Trending News

Latest News

You May Like