1. Home
  2. ஜோதிடம்

Newstm-இந்த வார பலன்கள் - மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரையிலான ராசிபலன்

Newstm-இந்த வார பலன்கள் - மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரையிலான ராசிபலன்

newstm-weekly-astrology

Newstm-இந்த வார பலன்கள் - மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரையிலான ராசிபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரக மாற்றங்கள்:

01-04-2019 அன்று காலை 10.00 மணிக்கு சந்திர பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.

03-04-2019 அன்று இரவு 9.36 மணிக்கு சந்திர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.

06-04-2019 அன்று காலை 7.49 மணிக்கு சந்திர பக்வான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷராசியினரே உங்களுக்கு தற்பெருமையும் இருக்கும். இந்த வாரம்  தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.  வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும்.  வாக்கு வன்மையால் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக  பேசுவது நல்லது.  பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.  பரிகாரம்: கந்தர் அனுபூதி படித்து முருகனை வணங்க மனக்குழப்பம் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனிராசியில் செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷபராசியினரே நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர். இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும். பகைவர்களால்  ஏற்படும் சிறு தொல்லைகளை  சமாளிக்க வேண்டி இருக்கும்.    புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது  தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல்  ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.   கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.   மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.  பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அஷ்டோத்ரம் படித்து வாருங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.ராசியில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. அடக்கமான சுபாவம் உடைய மிதுன ராசியினரே நீங்கள் தன்மையாக எல் லோரிடமும் பழக கூடியவர்கள். இந்த வாரம்  வாகனங் களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.  பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும்.  மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.  பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள புத பகவானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பார்வையாலேயே மற்றவர்களை பணியவைக்கும் திறமை உடைய கடகராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும்.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.   தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.  வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பரிகாரம்: அம்மனுக்கு மல்லிகைப் பூ சூடி நமஸ்காரம் செய்யுங்கள். வேண்டியது கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளிபஞ்சம ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய சிம்மராசியினரே நீங்கள் எதற்கும் கலங்காதவர். இந்த வாரம்  வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை.  தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.  சரக்குகளை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரி களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறுவதை  குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.  பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்திற்கு தயிர் வாங்கிக் கொடுங்கள். பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி    சுக ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. அமைதியும், கருணையும் கொண்ட கன்னிராசியினரே நீங்கள் அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். இந்த வாரம்  செய்வது வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்பு களை சமாளிக்க வேண்டி இருக்கும்.  தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை  அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.  எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.  பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தா வழிபாடு செய்து வர காரியங்களில் இருந்த வந்த தடைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிதைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த துலாராசி யினரே நீங்கள் மனஉறுதிமிக்கவர். இந்த வாரம் பணவரத்தை அதிகப்படுத்தும்  அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே  கவனமாக இருப்பது நல்லது.   இழுபறி யாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.   கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை  சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க ளுக்காக செலவு செய்யவும் நேரிடும். பெண்களுக்கு  எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  பயணங்களின் போது உடமைகளை  கவனமாக  பார்த்துக் கொள்வது நல்லது.  மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம். பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை மனதால் துதித்து வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும் அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப் பட்டாலும் முன்கோபம் அதிகமாக இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறி யான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.  வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும். பணவரத்து கூடும்.  தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக் கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.  பெண்களுக்கு  எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பரிகாரம்: திருவருட்பா படியுங்கள். ஏழை பிராமணருக்கு உதவுங்கள். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் தீரும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிராசியில் குரு (அதி. சா), சனி, கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் எளிதாக பழகக் கூடியவர். இந்த வாரம்  எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு  எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்குஅடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை தியானம் செய்து வழிபட நன்மைகள் வாழ்வில் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ - விரைய ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. விருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சி யடையும் மகர ராசியினரே நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த வாரம் வீண்செலவுகள் ஏற்படும்.   எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடு பட வேண்டி இருக்கும். மற்றவர்களின்  பிரச்சனை களுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே  இருக்கும் அன்பு நீடிக்கும்.  பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு  உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.  மாணவர்களுக்குகல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.   பரிகாரம்: சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிட்டு வாருங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  ராசியில் புதன், சுக்ரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – பஞ்சம  ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. மற்றவர்களிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்ளும் திறமை உடைய கும்ப ராசியினரே நீங்கள் ரகசியம் காப்பதில்  வல்லவர். இந்த வாரம் குறிக்கோளற்ற  பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே  திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது.  மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது.  சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம்  அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது  வியாபாரம் நன்கு நடக்க உதவும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். பெண்களுக்கு  அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு  இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.  பரிகாரம்: தினமும் காலை காகத்திற்கு சாதம் வைத்து முன்னோர்களை நினைத்து வணங்கி வருவது நன்மை தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனிராசியில் சூர்யன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – சுக  ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் குரு (அதி. சா), சனி, கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன் – விரைய ஸ்தனாத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. வேகமாக செயல்படும் குணம் கொண்ட மீனராசியினரே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல் பட்டால் காரியவெற்றி கிடைக்கும்.  இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பயணங்கள் சாதகமான  பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம். பெண்களுக்கு  விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு  ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை.  மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பரிகாரம்: சப்த கன்னியரை வழிபாடு நடத்தி வாருங்கள். நினைத்த காரியங்கள் கை கூடும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

newstm.in

Trending News

Latest News

You May Like