1. Home
  2. ஜோதிடம்

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 23 முதல் 29 வரையிலான ராசிபலன்

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 23 முதல் 29 வரையிலான ராசிபலன்

newstm-weekly-astrology-for-june-23-29

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 23 முதல் 29 வரையிலான ராசிபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 23 முதல் 29 வரையிலான ராசிபலன்

இந்த வார கிரக மாற்றங்கள்:
24-06-2019 அன்று இரவு 07:30 மணிக்கு சந்திர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
24-06-2019 அன்று பகல் 12:20 மணிக்கு செவ்வாய் பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார்.
27-06-2019 அன்று காலை 06:18 மணிக்கு சந்திர பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.
29-06-2019 அன்று பகல் 02:51 மணிக்கு சந்திர பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
29-06-2019 அன்று இரவு 08:33 மணிக்கு சுக்கிர பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார்.

மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எந்த வேலையையும் முழுக் கவனத்துடன் செய்யும் மேஷராசியினரே  இந்த வாரம் நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல் படுவீர்கள். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பி னர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக் கும். உறவினர்கள் வருகையும் அவர்க ளால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.  தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்ப வர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.  பெண்களுக்கு: தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு: கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: திருத்தணி முருகனை தரிசித்து வணங்க மனதில் நிம்மதி பிறக்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி  ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - களத்திர ஸ்தானத்தில் குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது -  தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: பிறர் உதவி என்று வந்தவுடன் உதவக் கூடிய ரிஷபராசியினரே இந்த வாரம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.  தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்ப வர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.  சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  பெண்களுக்கு: திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். தடைநீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு: சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரி யமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. பரிகாரம்: நவகிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி  மிதுனம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ)  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில்  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: சூழ்நிலைக்கேற்றவாறு குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசியினரே நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.   தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம்.  உத்தியோகத்தில் இருப்ப வர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். பெண்களுக்கு: திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங் களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு: சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. பரிகாரம்: முடிந்தபோதெல்லாம் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள் நன்மைகள் நடக்கும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  கடகம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அடுத்தவர் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளாத கடக ராசியினரே நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இந்த வாரம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.  ஏற்கனவே  வரவேண்டி இருந்து  வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும்.  உத்தியோகத்தில் இருப்ப வர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.  பெண்களுக்கு: திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூக மான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பரிகாரம்: திருவேற்காடு அம்மனை நினைத்து வணங்க மனக்குழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்  சிம்மம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  -   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: தன்னுடைய நிலை அறிந்து எப்போதும் செயல்படக் கூடிய சிம்மராசியினரே  இந்த வாரம்  எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடி யாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங் களை கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக்கி டையே இருந்த இடைவெளி குறையும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகள் உங்களது வார்த்தை களை மதித்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும் . இந்த லாபம் குறையாமல் இருக்க எப்போதும் உழைப்பில் கண்ணும்கருத்துமாக இருக்க வேண்டும் . நிதானத்தையும் தவற விட வேண்டாம்.  உத்தியோகத்தில் இருப்ப வர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. பெண்களுக்கு: துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும். மாணவர்களுக்கு: சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். உள்ளத்தில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ)  - சுக ஸ்தானத்தில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்     என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: செல்வ நிலையை அதிகம் விரும்பும் கன்னி ராசியினரே இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும்.  கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். பெண்களுக்கு: தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு: சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம்  கல்வியில் முன்னேற்றமடைய தேவையான  உதவிகள் கிடைக்கும்.  பரிகாரம்: காஞ்சி புரம் வரதராஜ பெருமாளை தரிசித்து விட்டு வாருங்கள். வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ)  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எப்போதும் நியாயத்திற்கு தலை வணங்கும் துலா ராசியினரே இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும்.  பெண்களுக்கு: நண்பர்களிடம் உறவினர் களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.    மாணவர்களுக்கு: சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து  செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும். பரிகாரம்: ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு கல்கண்டு நிவேதனம் செய்து வழிபட்டு வாருங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு (வ)  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: குடும்பத்துடன் பொழுதை கழிக்க விரும்பும் விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்க மானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.  முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள்.  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு: நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. மாணவர்களுக்கு: சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும். பரிகாரம்: திருப்புகழை பாடி மனதார முருகனை வழிபடுங்கள் நல்லவை எல்லாம் கிட்டும். அதிர்ஷ்ட கிழமைகள்:  செவ்வாய், சனி  தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - விரைய ஸ்தானத்தில் குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எந்த விசயத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமுடைய தனுசு ராசியினரே இந்த வாரம்  நல்ல பலன்களை பெறுவதற்கு உண்டான எல்லா விதமான முயற்சிகளையும் எடுப்பீர்கள். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சு திறமை கை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களு டன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். அதிகாரத்தை பிரயோகிக்க கூடாது. பெண்களுக்கு: நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு: சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும். பரிகாரம்: சிவாலயத்திற்குச் சென்று  நமசிவாய மந்திரத்தை உரக்கச் சொல்லி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்  மகரம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப  சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - லாப ஸ்தானத்தில் குரு (வ)  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: நெகிழ்ச்சியான தருணங்களை மனதில் நினைத்து மகிழ்ச்சியடையும் மகர ராசியினரே! இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  தங்களது பணிகளை  தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  பெண்களுக்கு: நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பரிகாரம்: தினமும் காகத்திற்கு சாதமிட்டு முன்னோர்களை வழிபட வாழ்வில் வளத்தைப் பெறலாம். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி  கும்பம்: கிரகநிலை: ராசியில் சந்திரன்  - சுக ஸ்தானத்தில்  சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - தொழில் ஸ்தானத்தில் குரு (வ)  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது -  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: பல சூழ்நிலைகளில் உங்கள் தயக்க குணத்தை வெளிப்படுத்தி விடும்  கும்பராசியினரே, இந்த வாரம் விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே சுமூக உறவு இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல  பலன் அடைவார்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.  எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது. பெண்களுக்கு: நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு: திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பரிகாரம்: நவகிரக சனி பகவானுக்கு அரளி மலர் கொடுத்து வணங்கி வர நல்லது நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி  மீனம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ. சூர்யன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது -  விரைய ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எதிர்மறையாக விசயங்கள் நடந்து விட்டால் தீரா துயரத்திற்கு ஆளாகும் மீன ராசியினரே, இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப் பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவை யும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு: திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.  பரிகாரம்: ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் அம்மனை வழிபட்டு வாருங்கள். நினைத்த காரியம் நடக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி  

newstm.in

Trending News

Latest News

You May Like