1. Home
  2. ஜோதிடம்

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 9 முதல் 15 வரையிலான ராசிபலன்

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 9 முதல் 15 வரையிலான ராசிபலன்

newstm-weekly-astrology

Newstm-இந்த வார பலன்கள் - ஜூன் 9 முதல் 15 வரையிலான ராசிபலன்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரக மாற்றங்கள்:

10-06-2019 அன்று இரவு 09:51 மணிக்கு சந்திர பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.

12-06-2019 அன்று இரவு 12:49 மணிக்கு சந்திர பகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

15-06-2019 அன்று காலை 05:08 மணிக்கு சந்திர பகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: சிக்கன நடவடிக்கைகளை கையாளும் மேஷ ராசியினரே இந்த வாரம்  நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில்  நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். அதே வேலையில்  நெருக்கடியான  நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். தொழிலில் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு: எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம். பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க உடல் பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்கிரகநிலை: ராசியில் சூர்யன், சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - சுகஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எடுத்த காரியங்களை ஆர்வத்துடன் செய்து முடிக்கும் ரிஷபராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்.  இந்த வாரம்  பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.    சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச் சலும் இருக்கும். வீண் பகை உண்டாக லாம். கவனமாக இருப்பது நல்லது.  பெண்களுக்கு: எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் இருக்கும். அறிவியல், கணித பாடங் களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். பரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமியை தாமரை இதழால் அர்சித்து வர செல்வம் பெருகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிகிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உயர்வான சிந்தனைகளை மனதில் கொண்டிருக்கும் மிதுன ராசியினரே பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த வாரம்  எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.  குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு: எந்த காரியத்தில் ஈடு படும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. பரிகாரம்: தினமும் பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிகிரகநிலை: தன வாக்கு குடும்ப சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: சுற்றுலா செல்ல அதிகம் விரும்பும் கடக ராசியினரே நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்த வாரம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி  இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். பெண்களுக்கு: எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்ற மடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பரிகாரம்: அம்மனுக்கு மல்லிகை மலரை கொடுத்து வர மன பயம் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்கிரகநிலை: ராசியில் சந்திரன்  -  சுக ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ -   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: குடும்பத்தின் மீது அதிக பற்றும்  பாசமும் கொண்டுள்ள சிம்ம ராசியினரே இந்த வாரம்  பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும்.  புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெண்களுக்கு: எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும். பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று வில்வமாலை அணிவித்து பூஜை செய்யுங்கள். நோய்கள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - விரைய ஸ்தானத்தில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எந்த ஒரு காரியத்திலும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கும் கன்னி ராசியினரே இந்த வாரம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக  நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர் பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். பெண்களுக்கு: எந்த நிலையிலம்  மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.  பரிகாரம் : பெருமாளுக்கு வேண்டிக் கொண்டு எந்த காரியங்களையும் செய்து வாருங்கள். வெற்றி கிட்டும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிகிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைக்கும் துலாராசியினரே இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப் படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தை யரின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர் களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு: எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்க ளில் செல்லும் போது கவனம் தேவை. பரிகாரம்: நரசிம்மருக்கு நெய் விளக்கேற்றி வழிபட கோபம் குறையும். சந்தோஷம் பிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிகிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: குழந்தைகளை அதிகமாக நேசிக்கும் விருச்சிக ராசியினரே இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். இருப்பதால் சாதகமான பலன் தரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங் கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். பெண்களுக்கு: எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம்.  மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர் களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.    பரிகாரம்: மனநிலை சரியில்லாதவருக்கு உதவுங்கள். அவருக்கு அன்னமிடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளிகிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: உள்ளதை உள்ளபடி அனைவரிடமும் எடுத்துக் கூறும் தனுசு ராசியினரே இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.  பண வரவு உண்டாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படு வீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாக லாம். கணவன், மனைவி ஒருவருக்கொரு வர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள் வது நன்மை தரும். தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பெண்களுக்கு: கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். பரிகாரம்: சித்தர்கள் இருக்கும் ஜீவ சமாதியை பிரார்த்தனை செய்யுங்கள். முன் ஜென்ம வினைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: அனைவரிடமும் உரிமையுடன் பழகி அடுத்தவர் மனதில் இடம் பிடிக்கும் மகர ராசியினரே நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர்.  இந்தவாரம் தொடக்கத்தில் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக  நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும்.  குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  பெண்களுக்கு: காரிய அனுகூலம் உண் டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். திடீர் பணதேவை உண்டாகலாம். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனிகிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளிக்கும் குணமுடைய கும்ப ராசியினரே இந்த வாரம் அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை கள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர் கள்.  வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்க ளின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும்.  கணவன்-மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். பெண்களுக்கு: காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப் பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். பரிகாரம்: நவகிரகத்திற்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வருவது நன்மை தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனிகிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: கோபத்தை கட்டுப் படுத்தி அடுத்தவர்களுடன் அன்புடன் பழகும் மீன ராசியினரே நீங்கள் எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள். இந்த வாரம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரி யோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளி டம் இனிமையாக பேசுவது நல்லது.     தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும். பெண்களுக்கு: காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி வழிபடுங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

newstm.in

Trending News

Latest News

You May Like