1. Home
  2. ஜோதிடம்

ஆவணி மாத பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

ஆவணி மாத பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

aavani-month-free-astrology

ஆவணி மாத பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது ஆவணி மாதம் 01ம் தேதி - 17.08.2018 அன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் - சுக்ல பக்ஷ சஷ்டியும் - ஸ்வாதி நக்ஷத்ரமும் - சுப்ர நாமயோகமும் - கரஜி கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 26.15க்கு (மாலை மணி 4.36க்கு) மகர லக்னத்தில் (உத்திராடம் - 2ம் பாதத்தில்) ஆவணி மாதம் பிறக்கிறது.

ஆவணி மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:

லக்னம் - உத்திராடம் - 2ம் பாதம் - சூரியன் சாரம்

சூரியன் - மகம் - 1ம் பாதம் - கேது சாரம்

சந்திரன் - ஸ்வாதி - ராகு சாரம்

செவ்வாய் - திருவோணம் - 2ம் பாதம் - சந்திரன் சாரம்

புதன் - பூசம் - 4ம் பாதம் - சனி சாரம்

குரு - விசாகம் - 2ம் பாதம் - குரு (சுய) சாரம்

சுக்கிரன் - ஹஸ்தம் - 2ம் பாதம் - சந்திரன் சாரம்

சனி - மூலம் - 3ம் பாதம் - கேது சாரம்

ராகு - பூசம் - 2ம் பாதம் - சனி சாரம்

கேது - உத்திராடம் - 4ம் பாதம் - சூரியன்

ஆவணி மாதம் பிறக்கும் போது கடக ராசியில் புதன், ராகு - சிம்ம ராசியில் சூரியன் - கன்னி ராசியில் சுக்கிரன் - துலா ராசியில் சந்திரன், குரு - தனுசு ராசியில் சனி(வ) - மகர ராசியில் செவ்வாய் (வ), கேது என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

கிரக மாற்றங்கள்:

ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார்.

ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் துலா ராசிக்கு மாறுகிறார்.

ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார்.

ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பக வான் கன்னி ராசிக்கு மாறுகிறார்.

மே ஷம்: கிரக நிலை:  சுக ஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள். கிரக  மாற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று பாக்கியஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.   பலன்கள்: இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். ராசிக்கு 7ல் குரு சஞ்சாரம் இருப்பதால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பஞ்சமாதிபதி சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சாரத்தாலும் தொழில் அதிபதி சனியில் சஞ்சாரத்தாலும் தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.  பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்னையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அஸ் வினி: இந்த மாதம் பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும்.  ப ரணி: இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.  கார்த்தி கை - 1: இந்த மாதம் அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.  சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 19, 20 - செப்டம்பர் 15, 16 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 07, 08 பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில் முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்ரிஷபம்: கிரக நிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என நவக்கிரகங்களுடைய உலா இருக்கிறது.   கிரக மா ற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று அஷ்டமஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு ராசிநாதன் சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.   பலன்க ள்: இந்த மாதம் ராசியாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். தொழில் ஸ்தானாதிபதி சனி அஷ்டமஸ்தானத்தில் இருந்தாலும் தொழில் ஸ்தானம் குரு - சனி பார்வை பெறுவதால் செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பாதிபதி புதன் சுய சாரம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.  கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.  அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். கார் த்திகை - 2, 3, 4: இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.  ரோ கினி: இந்த மாதம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.  மிருகசீரி ஷம் - 1, 2: இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 21, 22, 23 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 09, 10 பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளிமிதுனம்: கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரக மா ற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு ராசிநாதன் புத பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணீய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு ராசிநாதன் புத பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.   பலன்கள்: இந்த மாதம் ராசியை சனி பார்ப்பதால் வீண் அலைச்சல் உண்டாகும். ஆனாலும் சுபமாக எதுவும் நடந்து முடியும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் புதன் அலங்கரிப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களின் மூலம் ஏற்பட்ட டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும். பெண்களுக்கு நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.  கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.  மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.  மிருகசீரி ஷம் - 3, 4: இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.  திருவா திரை: இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  புனர்பூ சம் - 1, 2, 3: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.  சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 24, 25 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 11, 12 பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளிகடகம்: கிரகநிலை:  ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரக மா ற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்கள்  இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசியிலிருக்கும் கிரக கூட்டணியால் வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள். சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.  கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.  மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.  புனர் பூசம் - 4: இந்த மாதம் அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.  பூச ம்: இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆயி ல்யம்: இந்த மாதம் ஆர் டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 26, 27, 28 அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 17, 18 - செப்டம்பர் 13, 14 பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழி பட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது.  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளிசிம்மம்: கிரகநிலை:  ராசியில் சூர்யன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரக மாற் றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் ராசிக்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.   பலன்கள்: இந்த மாதம் ராசியாதிபதி சூரியன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். தனஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன் இருப்பு பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்ப ஸ்தானத்தை சுக்கிரன் அலங்கரிக்க குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.  பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.  கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.  மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. மக ம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.  பூர ம்: இந்த மாதம் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வீண் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.  உத்தி ரம் - 1: இந்த மாதம் வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 29, 30 அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 19, 20 - செப்டம்பர் 15, 16 பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்கன் னி: கிரகநி லை:  ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்களின் இருப்பு இருக்கிறது.  கிரக மா ற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று சுக ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் ராசிக்கு மாறுகிறார்.   பலன்கள்: இந்த மாதம் ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதனுடன் ராகு இருப்பதால் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் ஸ்தானத்தை குரு சனி ஆகியோர் பார்க்கிறார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் ஏற்படும். குடும்ப ஸ்தானாத்தில் குரு - சுக்கிரன் இருப்பதால் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.  அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. உத்தி ரம் - 2, 3, 4: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.  ஹ ஸ்தம்: இந்த மாதம் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  சித்தி ரை - 1, 2: இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.  சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 31, செப்டம்பர் 01 அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 21, 22, 23 பரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை புதன்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளிது லாம்: கிரக நிலை:  ராசியில் சந்திரன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என நவக்கிரகங்கள் அருள் செய்கிறார்கள்.  கிரக மாற் றங்கள்:  ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று சுக ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் விரைய ராசிக்கு மாறுகிறார்.   பலன்கள்: இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.  பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.  அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.  கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.  சித்திரை - 3, 4: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.  ஸ்வாதி: இந்த மாதம் எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.  விசாகம் - 1, 2, 3: இந்த மாதம் எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 02, 03 அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 24, 25 பரிகாரம்: அருகி லிருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளிவிரு ச்சிகம்: கிர கநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்களுடைய இருப்பு இருக்கிறது.  கிரக  மாற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் லாப ராசிக்கு மாறுகிறார்.  பலன்கள்: இந்த மாதம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் ஆட்சியாக இருப்பதால் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விசாக ம் - 4: இந்த மாதம் அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும்.  அனு ஷம்: இந்த மாதம் தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.  கேட் டை: இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரவு அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும்.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 04, 05, 06 அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 26, 27, 28 பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்தனுசு: கிரகநிலை:  ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.   கிரக மா ற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்கள்: இந்த மாதம் ராசியில் சனி இருந்தாலும் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக் கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.  பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும்.  கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.  அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.  மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.  மூல ம்: இந்த மாதம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.  பூராட ம்: இந்த மாதம் புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். உத்தி ராடம் - 1: இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 07, 08 அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 29, 30 பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்மகரம்: கிரகநிலை:  ராசியில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரக மாற்றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று விரைய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று ராசியில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்கள் : இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் வீண் பிரச்னைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.  பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.  கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.  அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  உத்திராடம் - 2, 3, 4: இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.  திருவோணம்: இந்த மாதம் எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாகும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். அவிட்டம் - 1, 2: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 09, 10 அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 31, செப்டம்பர் 01 பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளிகும்பம்: கிரகநிலை:  ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரக மாற் றங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று லாப ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று விரைய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்கள்: இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது.  பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.  அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.  அவி ட்டம் - 3, 4: இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  சத யம்: இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது அவசியம்: பூரட்டாதி - 1, 2, 3: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.  சந்திராஷ்டம தினங்கள்: செப்டமப்ர் 11, 12 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 02, 03 பரிகாரம்: விநாயகரை சனிக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.] அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்மீனம்: கிரகநிலை:  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  கிரக மாற்ற ங்கள்: ஆவணி மாதம் 05ம் தேதி - 21.08.2018 - செவ்வாய்கிழமை அன்று தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 12ம் தேதி - 28.08.2018 - செவ்வாய்கிழமை - மதியம் 1.11க்கு புத பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 15ம் தேதி - 31.08.2018 - வெள்ளிக்கிழமை - இரவு 12.01க்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ஆவணி மாதம் 22ம் தேதி - 07.09.2018 - வெள்ளிக்கிழமை அன்று லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி பெற்று நேர் பாதைக்கு மாறுகிறார். ஆவணி மாதம் 15ம் தேதி - 15.09.2018 - சனிக்கிழமை - மதியம் 02.06க்கு புத பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்கள்: இந்த மாதம் எதிலும் நன்மையே நடக்கும். எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.  அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும். பூரட் டாதி - 4: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். உத் திரட்டாதி: இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவு இருக்கும்.  ரேவதி: இந் த மாதம் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.  சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 17, 18 - செப்டம்பர் 13, 14 அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 04, 05, 06 பரிகாரம்: வியாழக்கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன்

newstm.in

Trending News

Latest News

You May Like