1. Home
  2. ஜோதிடம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-19


guru-peyarchi-prediction-2018-19

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-19

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மங்களநா யகன் செவ்வாய் வீட்டிற்கு மாறும் குருப் பெயர்ச்சி பலன்கள்

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5119 - சாலிவாகன சகாப்தம் 1940 - பசலி 1428 - கொல்லம் 1194ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது புரட்டாசி மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 04.10.2018 கிருஷ்ணபக்ஷ ஏகாதசியும் வியாழக்கிழமையும் ஆயில்ய நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 40.00க்கு - இரவு 10.05க்கு குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தனுசு ராசிக்கு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 20ம் தேதி - 05.11.2018 - திங்கட்கிழமையன்று மாறுகிறார்.

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:

நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்:

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

பொதுவா க ராசி கள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - மீனம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: சிம்மம் - துலாம் - விருச்சிகம் - மகரம் - கும்பம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கன்னி - தனுசு

குரு ப யோ டேட்டா:

சொந்த வீடு - தனுசு, மீனம்

உச்சராசி - கடகம்

நீச்சராசி - மகரம்

திசை - வடக்கு

அதிதேவதை - பிரம்மா

நிறம் - மஞ்சள்

வாகனம் - யானை

தானியம் - கொண்டைக்கடலை

மலர் - வெண்முல்லை

வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை

ரத்தினம் - புஷ்பராகம்

நிவேதனம் - கடலைப்பொடி சாதம்

உலோகம் - தங்கம்

இனம் - ஆண்

உறுப்பு - தசை

நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்

பகைகிரகம் - புதன், சுக்கிரன்

மனைவி - தாரை

பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்

பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்

தகுதி -தேவகுரு

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

குருவால் ஏற்ப டும் பாக் கியங்கள்:

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

பொது பல ன் கள்:

பொதுவாக விருச்சிக ராசி என்பது வேகமாக செய்யக்கூடிய காரியங்கள் மற்றும் பூமி சம்பந்தபட்ட காரியங்களை குறிக்கக்கூடிய ராசியாகும். இதன் அதிபதி பூமி காரகனாகிய செவ்வாய் ஆவார். வேகம் - பூமி - வீடு - மனை - வயல் - வாகனம் - ராணுவம் - காவல் ஆகிய விஷயங்களுக்கு செவ்வாயே அதிபதியாவார். அதே போல் மங்களகாரியங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கும் செவ்வாய் முக்கியமானவர் ஆவார். மங்களகாரகன் செவ்வாய் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது நல்ல பலன்களை அள்ளித் தருவார். ஜோதிடத்தில் இதற்குப் பெயர் குரு மங்கள யோகம் என்று அழைக்கப்படும்.

நாடு மற்று ம் பொருளாதாரம்:

செவ்வாய் வீட்டிற்கு குரு மாறுவதால் ரியல் எஸ்டேட் நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு விருச்சிகம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் முன்னேற்றும். சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர்.

உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். குரு சாரத்தில் மாறுவதால் மங்கள காரியங்கள் மிக அதிக அளவில் நடைபெறும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

வானி லை:

இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

ஆன்மீகம் ம ற்றும் கோவில்கள்:

புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வெள்ளிகிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

பொது:

பல முக்கிய வழக்குகளுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். குரு இல்லறத்தின் காரக கிரகமான சுக்கிரன் வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

ஆரோக் கியம்:

நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். நாட்பட்ட நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.

குடு ம்பம்:

கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்னைகளும் தலை தூக்கும்.

அரசி யல்:

அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

மேஷம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பல ன்: உடன் இருப்பவர்களை உயிரினும் மேலாக காக்கும் குணமுடைய மேஷ ராசி அன்பர்களே, சனி பகவான் தனது மூன்று, ஏழு மற்றும் பத்தாம் பார்வையால் உங்கள் ராசியின் தந்தையார் ஸ்தானம், மூத்த மற்றும் இளைய சகோதர ஸ்தானங்களை பார்க்கிறார்.  குடும்ப ஸ்தானத்தை குரு தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார்.தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்னைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்னைகள் இருந்திருக்கும். அதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மொத்தத்தில் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் விலகி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் ஸ்தானத்தில் கேது சஞ்சாரம் செய்ய ராகு தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். இனி அது மாறும். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும். யாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள். காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரையத்தையும் குறைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொழில் தொடங்க சூழல் உருவாகும். உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம். பொறுமயாக எடுத்துச் சொல்வது நல்லது. நீங்கள் பொறுமையைக் கடைத்தால் உத்யோகஸ்தர்களுக்கு இந்த குருபெயர்ச்சி லாபமானதாகவே இருக்கும். பெண்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும்.  மாணவர்களுக்கு குரு உங்கள் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் அந்த பாடம் உங்கள் மனதில் ஆழமாக பதியும். என்றும் மறக்காது. தேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினருக்கு தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினர் உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கவலை வேண்டாம். இந்த காலகட்டத்தை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இது அமையும். நட்ச த்திரப்பலன்கள் அஸ் வினி:  இந்த குருப் பெயர்ச்சியில் சிறு விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை தென்படுவதால் பயணங்களின் போது மிகுந்த கவனமும் நிதானமும் தேவை. உணவு விஷயத்தில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதன்மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக் கூடும். பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும் விலகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும். பர ணி:  எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவதில் முனையக்கூடும். பணப்புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்னை எதுவும் இராது என்றாலும் பெருந்தொகை கடன் கொடுக்கும்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பது கூடாது. கிரு த்திகை: புதிய முயற்சிகள் எதிலும் அவரசப்பட்டு ஈடுபடாதீர்கள். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து சாதக பாதகங்களை அறிந்த பின்னர் திட்டமிட்டுச் செயல் படுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசிப் பழகுவது நல்லது. பயணங்களின் போது மிகவும் எச்சரிக்கையாய் இருந்து வருவது அவசியம். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படக்கூடிய நிலை உண்டு. நண்பர்களால் சிலர் அனுகூலமடையக்கூடும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வர உங்களுக்கு வர இருக்கும் அவமானங்களைத் தவிர்க்கலாம்.ரிஷபம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, குரு பகவான் இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்கள் களத்திர ஸ்தானத்திற்கு வருகிறார். அத்துடன் உங்கள் ராசியை ஏழாம் பார்வையாக பார்க்கிறார். உங்களின் போராட்டம் அனைத்தும் விதைகளாய் மாறி உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் கால காட்டம் இந்த குருபெயர்ச்சி. கவலை வேண்டாம். உங்களின் லாப ஸ்தானத்தையும், தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டி வரலாம். உங்களின் மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் அனைத்தும் மாறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழிலில் கிடைக்க வேண்டிய நியாயமான பங்குகள் நல்ல முறையில் கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்து கொண்டிருந்தாலும், அல்லது மூத்த சகோதரர்களுடன் தொழில் செய்து கொண்டிருந்தாலும் நல்ல லாபத்தைக் குரு பகவான் கொடுப்பார். வண்டி, வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலி ல் இருப்போர் நல்ல வளர்ச்சியைக் காண முடியும்.  உத்யோகஸ்தர்கள் தொலைந்து போன சில ஆவணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதை வைத்து உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்டுவார். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்காமல் வேலையை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து காணப்படும்.  பெண்களுக்கு களத்திர ஸ்தானத்திற்கு குரு வருவதால் கணவன் - மனைவி உறவு பலப்படும். கொடுத்த கடன்கள் ஓரளவிற்கு திருப்பி கிடைக்கும். உடலுக்கு அவ்வப்போது மருத்துவ செலவுகல் தேவையில்லாமல் வந்து கொண்டு தான் இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைகள் ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்து அதில் பரிசுகளும், கேடயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல் துறையினருக்கு உங்கள் கடமைகளை மட்டும் செய்து வருவீர்கள். அது உங்களுக்கு எதிர்கால வாழ்விற்கு வடிகோலாக அமையும். மூத்த அரசியல் வாதிகள் உங்களுக்கு நல் வாக்கு வழங்குவார்கள். உங்களுக்கு மன நிம்மதியை அளிக்கும்.  கலைத்துறையினருக்கு குரு சுக்கிரன் வீட்டைப் பார்ப்பதால் சக கலைஞர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். நாடகக் கலைஞர்களும், மேடைக் கலைஞர்களும் கூட நல்ல உயர்வான நிலையை அடைவார்கள். மற்றவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதல்ல. நட்சத்திரபலன்கள் கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்:  இந்த குருப் பெயர்ச்சியில் புதிய, சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி அவர்களைத் திருப்தி படுத்துவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும். கோபத்தைக் கட்டுபடுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம். பொதுவாக உடல் நலத்தில் ஓரளவு அக்கறை செலுத்தி வருவது நல்லது. புதிய திட்டங்களைச் செயல் படுத்தும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நன்மை தரும். ரோகிணி:  இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும். குழப்பத்துக்கு இடங்கொடுக்காதீர்கள். அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளைச் சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களைச் சரியாகப் பரிசோதனைச் செய்து, வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும். பிற்காலத்தில் தொல்லை நேராமல் தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் திருப்திகரமான போக்கு தென்படும். மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்:  இந்த பெயர்ச்சியில் சகோதர வழியில் செலவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் கைகூடி வரும். இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து வரும். கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். மணமான பெண்கலில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படக்கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்பாராத ஊதிய உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள். பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹாலட்சுமிக்கு மல்லிகை மலர் அர்பணித்து வர வாழ்க்கைத் துணையுடனான பிரச்னைகள் குறையும். மிதுனம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் உடைய மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு குருபகவான் வருகிறார். உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். விரைய ஸ்தானமாகிய ரிஷபத்தை பார்க்கிறார். தனம், குடும்ப, வாக்கு ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். நிம்மதியான தூக்கம் வரும். விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக் கொள்ளலாம். சில பாக்கியங்கள் கிடைக்க வில்லையே என்று நீங்கள் வருத்தப் படலாம். அது இந்த குரு பெயர்ச்சிக்கு பின்பு சரியாகும்.  குடும்ப ஸ்தானத்தை குரு தனது ஒன்பதாம் பார்வையால் பார்க்கிறார். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்கள் உங்களுக்கு ஆதர்வாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.  தொழில் ஸ்தானத்தை குரு தனது ஐந்தாம் பார்வையாலும், தன ஸ்தானத்தை தனது ஒன்பதாம் பார்வையாலும் பார்ப்பதால் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள். உங்களின் தொழிலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும். பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள். மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில் பயில வாய்ப்புகளும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு உங்களைப்பற்றி குறைகூறியவர்கள் உங்களை புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். இதனால் உங்களின் மனம் நிம்மதி அடையும். கலைத்துறையினருக்கு கதை இலக்கியம் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள். இதனால் உங்கள் புகழ் உயரும். நட்சத்திரப் பலன்கள்:  மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் எளிதில் முடியாமல் தாமதம் ஆகக் கூடும் என்பதற்காக நீங்கள் அவசரப் படாதீர்கள். இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் மனத்தைச் செலுத்துவது நல்லது. சிலர் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றை பெற வாய்ப்புண்டு.பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் இருப்பவர்கள் சாதகமான தீர்ப்பைப் பெறுவது சாத்தியமாகும். திருவாதிரை:  இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தொழில் , வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த பட்ச ஆதாயத்தைப் பெறக்கூடும். நஷ்டம் பற்றிக் கவலைப்படாதீர்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. உறவினரின் ஒத்துழைப்பை எல்லாம் பெருமளவில் எதிர்பார்ப்பதற்கில்லை. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிறமொழி பேசும் ஒருவரால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகளில் கவனம் தேவை. புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்:  குருப் பெயர்ச்சியின் மூலமாக உத்தியோகஸ்தர்களில் சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு இப்போது நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இனம் புரியாத தேவையற்ற மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி தள்ளிப்போகலாம். கடன் கிடைக்குமாயினும் வாங்காமலேயே சமாளிப்பது பிற்காலத்திற்கு உதவியாக அமையும். ஜாமீன் கையெழுத்துபோட்டு கடன் வாங்கித் தர முயற்சிக்காதீர்கள். பரிகாரம்: புதன் கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட பெரும் நோய்களினால் பாதிக்காமல் காக்கப்படுவீர்கள்.கடகம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தன்னைச் சுற்றி உள்ளவர்களின் துன்பங்களை தன்னுடையதாகக் கருதும் கடக ராசி அன்பர்களே, குரு தனது ஒன்பதாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்க்கிறார். மனதில் இருந்த ஒருவித பயம் அகலும். நிம்மதியான் தூக்கம் வரும். எப்போதும் துர் விஷயங்களைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருந்திருக்கும். அது மாறும். மனதில் தெளிவு பிறக்கும். குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் எதிர்பார்த்திருந்ததை விட சிறப்பான வாழ்க்கை அமையும். உங்கள் மனம் தெளிவடையும். தோற்றப் பொலிவு உண்டாகும். உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.  தொழிலைப் பொறுத்த வரை குரு பகவானின் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தின் மீது விழுவதால், மனதுக்குள் ஒரு இலக்கை வைத்து அதை நோக்கி ஓடுவீர்கள். நேரம், தைரியம், வாக்கு இவை அனைத்தும் உங்கள் வெற்றிக்கு தோள் கொடுக்கும். எனவே இந்த குரு பெயர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், பணி இடமாற்றமமும் உங்களைத் தேடி வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு அதிர்ஷ்டத்தால் சில வாய்ப்புகளும், சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும். வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளையும் நீங்கள் படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும். அரசியல்துறையினர் வார்த்தைகளை சரியான முறையில் பிரயோகப்படுத்துவது அவசியம். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்தாலே சில பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பாராமல் சில முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இதனால் உங்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். நட்சத்திரப் பலன்கள் புனர்பூசம் 4 ஆம் பாதம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லாப் பிரிவினருக்குமே ஏற்றமும் இறக்கமும் கூடிய நிலையே இருந்து வரும். எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியை எதிர்பார்க்க முடியாது எனபதால் தொழில் , வியாபாரம் போன்ற எதுவாயினும் பெரும் ஆதாயங்களை நீங்கள் எதிர்பார்ப்பதற்கில்லை. குடும்ப நிலையிலும் நிம்மதி குறைந்து காணப்படலாம். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கைகூடும். பெரும்பாலும் கவலைகள் அதிகமாகவும் களிப்பு குறைவாகவும் காணப்படும் என்றாலும் மன்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதியும் நிம்மதியும்காணலாம். தெய்வபலம் துணை நிற்கும். பூசம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிதானமான மனப்போக்கு தேவை. சகோதர வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குடும்பத்தினரிடம் மனகசப்பு கொள்ளும் சூழ்நிலையில் மன அமைதி இழக்கும் நிலை ஏற்படுமாயினும் அது சிறிது காலத்தில் மாறிவிடும் நிலை உள்ளாதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் நிதானமாக இருந்துவாருங்கள். பெரும் பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. இறைவழிபாட்டில் மனத்தைச் செலுத்தி பொறுமையுடன் செயல் பட்டு வருவதே இப்போதைக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது உத்தமம். ஆயில்யம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரக்கூடிய நிலைஉள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருவது நல்லது. என்றாலும் எந்த முயற்சியில் ஈடுபடும் போதும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து திட்டமிட்டு அதன் பிறகே செயல்படத் தொடங்குவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வேலையாள்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ற நிலை உள்ளதால் அவர்களிடம் கனிவாகநடந்து கொள்வதன் மூலம் பிரச்னைகள் குறையும். அரசு வழியில் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. கண்ணில் சிலருக்கு கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமாகும். சிலருக்கு திடீர் தனவரவு உண்டாக வாய்ப்புண்டு, வாகனப் பழுது பார்ப்புச் செலவு சிலருக்கு ஏற்படக்கூடும். நெருப்பு அருகில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்பாளுக்கு மல்லிகை மலர் சாற்றி வழிபட பூர்வீக சொத்துக்களில் இருக்கும் பிரச்னைகள் தீரும்.சிம்மம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஆளுமைத் திறன் அதிகம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியால் குரு உங்களின் அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் மற்றும் விரைய ஸ்தானத்தையும் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார். உங்களைப் புரிந்து கொள்ளாமல் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் தெளிவாகும். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் வீடு, வாகனம் வாங்கும் போது குடும்பத்தாருடன் ஆலோசித்து பின்பு முடிவெடுக்கவும்.. குடும்பத்துடன் சேர்ந்து சில ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகளால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். தாயின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தினால் சிறு உடல் உபாதைகளை தவிர்க்கலாம். . பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி அவ்வப்போது கவலை வந்து போகும். தொழில் ஸ்தானமாகிய ரிஷபத்தை குரு பகவான் தனது ஏழாம் பார்வையாக பார்க்கிறார். தொழிலைப் பெருக்குவதற்கான நிதி வசதிகள் நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். லாபம் பெறுவதில் இருந்த தடங்கல்கள் மறைந்து நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  உத்யோகஸ்தர்கள் உங்களுக்கென்று கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்தாலே நலம். பண விஷயத்தைப் பொறுத்த வரை கவலை வேண்டாம். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். பெண்களில் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்கும். மாணவர்களுக்கு டெக்னிகல் துறையில் பயில்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் படிப்பிற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு இதுவரை இருந்த விரையச் செலவுகள் குறைந்து லாபம் அடைவீர்கள். மக்களுக்குத் தேவையானவற்றில் பணத்தை செலவழிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் மிகுந்து காணப்படும்.  கலைத்துறையினருக்கு உங்களை ஊக்குவிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். பணமுடை நீங்குவதற்கும் வாய்ப்புள்ளது. சக கலைஞர்களின் நட்பு வகையில் பிரச்சினைகள் வரலாம். நட்சதிரப்பலன்கள் மகம்: உங்கள் மனதில் பல்லாண்டுகாலமாகத் திட்டுமிட்டு வந்தவை யாவும் இப்போது நடைபெறக் காண்பீர்கள். பெரும்பாலும் வீடு,மனைகளாகத்தான் அவை இருக்கும். ஏற்கனவே சொந்தவீட்டில்தான் இருக்கக்கூடுமாயினும் இப்போது மனைவியின் பெயரில் மேலும் ஒரு வீட்டை வாங்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள்.குடும்பத்தில் எந்த வகையிலும் குதூகலத்திற்குக் குறைவிராது. எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு உண்டு. உங்கள் திட்டங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெறத் தவறுமாயினும்,வெற்றி பெரும்வரை சளைக்காமல் அதற்கெனப்போராடி இறுதியில் வெற்றியைப் பெற்று மகிழ்வீர்கள். உடல்நிலை சீராக இருந்துவரும். அக்கம்பக்கத்தாரிடம் அளவுடன் பேசி நிறுத்திக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகளின் பெருமை பன் மடங்காக பெருகும். பூரம்: குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள் என்பதால் பணப் புழக்கத்தில் மிகத் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றி மகிழ்வித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தி வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள். பிரிந்து சென்ற உறவினர் திரும்பி வந்து சேருவார்கள். மற்றவர்களுக்கு பெருமளவில் உதவியும் செய்வீர்கள். மாணவமணிகள் எல்லா வகையிலும் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்று மகிழ முடியும். மற்றவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பார்கள். பயணங்களின் போது மட்டும் கவனம் தேவை. உத்திரம் 1 ம் பாதம்: குருப் பெயர்ச்சியில் உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் பெரும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் பணப்புழக்கம் உள்ள பணிகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அரசு வழியில் சில அனுகூலங்களை எதிர்பார்க்கலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்த்து விடுவது நல்லது. வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் உண்டாக இட முண்டு என்பதால் அதைக் கொண்டு விரிவுபடுத்தினால் போதுமானது. கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், வேகத்தைக் குறைத்து நிதானமாகச் செல்வதே விவேகமாகும். பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வில்வம் அர்ப்பணித்து வழிபட வாகனம் சம்பந்தமாக இருக்கும் தடை அகலும்.கன்னி: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உறவுகளைப் பெரிதென மதிக்கும் குணமுடைய கன்னிராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு குருபகவான் பெய்ர்ச்சி ஆகிறார். அவர் மூன்றாம் இடத்திலிருந்து உங்களுக்கிடையே களத்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தையும், ஒன்பதாம் இடமாகிய பாக்கிய ஸ்தானத்தையும், பதினொறாம் இடமாகிய லாபஸ்தானத்தையும் பார்க்கிறார்.  குடும்பத்திலிருப்பவர்கள் அனைவரும் உங்கள் பேச்சுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது அதற்கான பாக்கியம் கிட்டும். வாழ்வில் அவரவர் வயதிற்கு ஏற்ப நன்மைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். தொழிலில் தந்தையார் தொழிலை கவனித்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை தந்தையின் ஆலோசனையின்படி கேட்டு முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். வீண் செலவுகளைத் தவிருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைப்பதற்காக அதிகமான வேலைப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் சென்றுவர வேண்டியிருக்கும். பெண்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிக வேலைப்பளு அதிகமாக இருக்கும். தந்தையாரின் அன்பு அதிகரிக்கும். மாணவர்களில் சங்கீதம் பயிலும் மாணவர்கள் நல்ல ஞானம் கிடைக்கும். நண்பர்களுடன் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு மக்களிடையையும், தொண்டர்களிடையையும், நல்ல செல்வாக்கு உயரும். கட்சிப் பணிகளில் புதிய முயற்சிகள் கை கூடும்.  கலைத்துறையினருக்கு புதிய படத் தயாரிப்பாளர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு நல்ல லாபத்தை பெறலாம். அமோக வாய்ப்புகள் வரும். உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்: இந்த குருப் பெயர்ச்சியில் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனத்தில் இருந்து வந்த தேவையற்ற வீண் குழப்பங்கள் அகலும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போதும் நெருப்பினைப் பிரயோகப்படுத்தும் போதும் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் நல்ல மாறுதல்களை உணர்வீர்கள். வெளிநாடு பயணம் செல்லலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஹஸ்தம்:  இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்பார்க்காத பணி இட மாற்றம் ஏற்படும். எந்த விஷயத்திலும் ஈடுபடும் போதும் நேர்மறை எண்ணங்களோடு ஈடுபடுவது நல்லது. கூடுமானவரை சோம்பேறிதனத்தை விடுவது நன்மை தரும். பொருளாதார நிலை மேலோங்கும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும். பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சித்திரை 1, 2ம் பாதங்கள்: இந்த குருப் பெயர்ச்சியில் குடும்ப நிம்மதியில் சில குழப்பங்கள் வரலாம். பிள்ளைகள் வழியில் சில கவலைகள் நேரலாம். பொருளாதார நிலை மேலோங்கும். நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவீர்கள். தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது நன்மை தரும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். வியாபாரிகள் அதிக அள்வில் முதலீடு செய்யும் முன் யோசித்து செய்யவும். தள்ள்ப் போய் கொண்டிருந்த திருமணம் கைகூடும். அரசு வழியில் அனுகூலம் கிடைக்கும்.  பரிகாரம்: புதன்கிழமை தோறும் விஷ்ணுவிற்கு மல்லிகை மலர் அர்ப்பணித்து வணங்க சகோதரர்களிடம் இருக்கும் மனசங்கடங்கள் தீரும்.துலாம்:  கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உடனிருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் குணமுடைய துலாராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாமிடமாகிய தனம் , வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். அவர் அங்கிருந்து ஆறாமிடமாகிய ரண, ருண, சத்ரு ஸ்தானத்தையும், எட்டாமிடமாகிய ஆயுள் ஸ்தானத்தையும், பத்தாமிடமாகிய தொழில் ஸ்தானத்தையும் சுபப்பார்வையாக பார்க்கிறார்.  குடும்பத்தில் பழைய கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும், அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். உங்கள் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வளவு காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள் கூட இப்போது ஓடிஆடி செய்வதற்கு முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் உங்கள் உடல் நிலையால் சில காரியங்களைத் தள்ளிப்போட்டு வந்தீர்கள். இனி அந்த நிலை இருக்காது. சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். இதனால் தொழிலும் சூடு பிடிக்கும். லாபமடைவீர்கள். வீண் அலைச்சல் இருந்து கொண்டே இருந்த நிலை மாறும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை இடத்தில் ஏற்பட்ட சில அவமானக் குறைவால் வேலையை விட்டவர்கள் இப்போது வேலையில் சேர்ந்து தொடருவார்கள்.  பெண்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று இருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிப்பவர்களின் மனக்கஷ்டங்கள் நீங்குவதன் மூலம் கல்வியில் கவனம் செலுத்த முடியும். அரசியல்துறையினருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். இதன் மூலம் நீங்கள் நிம்மதியாக செயல்படமுடியும்.  கலைத்துறையினருக்கு வெளியூர் பயணங்கள் அதிகம் இருந்தாலும் அவை அனைத்தும் உங்களின் முன்னேற்றத்திற்காகவே. அதிக உழைப்பை தர வேண்டியிருக்கும். நட்சத்திர பலன்கள்: சித்திரை 3, 4ம் பாதங்கள்: இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.  ஸ்வாதி: இந்த குருப் பெயர்ச்சியில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: இந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும். பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மஹாலட்சுமிக்கு தாமரை மலர் அர்ப்பணிக்க குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரும்.விருச்சிகம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். பலன்: வார்த்தைகளால் மற்றவர்களைக் கவரும் விருச்சிக ராசி அன்பர்களே, விரைய ஸ்தானத்தில் இருந்த குரு இப்போது ராசிக்கு வருகிறார். இதன் மூலம் பஞ்சம ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.  குடும்பாதிபதி குரு பகவான் ராசியில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை சில தடைகளுக்குப் பிறகு வாங்குவீர்கள். சிறு தடை வருகிறதென மனம் கலங்க வேண்டாம். தேவையில்லாமல் கருத்து சொல்வதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. மன சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. தொழில் - வியாபாரம் செய்பவர்கள் தேவையில்லாமல் உங்கள் தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய ஆட்களை நம்பி அதிக முதலீடு செய்ய வேண்டாம். இருப்புக்கு அதிகமாக பொருள் தருவதாக வாக்கு கொடுப்பதையும் தவிர்த்தல் நலம். நீங்கள் கவனமுடன் செயல்பட்டால் எந்த வித நஷ்டமும் இல்லாமல் இருக்கும். உத்யோகஸ்தர்கள் முக்கிய விஷயங்களில் அனைவரிடமும் கருத்து கேட்டாலும் தீர ஆலோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு வெற்றியைத் தரும். பெண்களில் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் இருக்கும்.  மாணவர்களுக்கு எதிர்பாலினத்தாரால் இருந்த பிரச்னைகள் தீர்ந்து நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். தந்தையின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் சிறந்த மாணவராக திகழலாம்.  அரசியல் துறையினருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் புகழ்ச்சிக்கு செவி சாய்க்காமல் இருப்பது நல்லது.  கலைத் துறையினருக்கு உங்கள் குடும்பத்தார் பெருமைபடும் அளவிற்கு பெரிய ஒப்பந்தங்கள் உங்களைச் தேடி வரும். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற குரு பகவான் துணை நிற்பார். நட்சத்திரப்பலன்: விசாகம் 4ம் பாதம்: இந்த குருப் பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரும் ஆதாயங்களைப் பெறும் வழியுண்டு. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பணப்புழக்கம் திருப்திகரமாகவே இருக்கும். அனுஷம்: இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகத்தில் மேன்மையான நிலை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நிலையில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். புத்திர வழியில் சிறு சிக்கல் ஏற்பட்டு நிவர்த்தியாகும். சிலருக்கு கை, கால்களில் வலி போன்ற சிறு தொல்லைகள் ஏற்பட்டு குணமாகும். கேட்டை: இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் பெரிதும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்து போடவோ முயற்சி செய்யாதீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கு காணப்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு அரளி மாலை சாற்றி வழிபட மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும்.தனுசு: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தனுசு ராசி அன்பர்களே, குரு பகவான் உங்களின் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் மூலம் உங்களின் சுகஸ்தானத்தையும், ரண ருண ரோக ஸ்தானத்தையும் மற்றும் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.  குடும்பத்தில் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வீடு, மனை வாங்கவும் யோகம் உண்டு. விரையத்தில் குரு என்பதால் சுப விரையங்களான வீடு, மனை, வாகனம், திருமணம் போன்ற செலவுகள் இருக்கும். எதிர்பார்க்காமல் சில செலவுகள் உண்டாகும் என்றாலும் அவை அனைத்தும் முதலீடுகளே. தொழில் செய்பவர்கள் புதிய கட்டிடங்கள் கட்டுதல், பெரிய கடைகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற செலவுகள் உண்டாகும். உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்தவர்கள் அனைவரும் விலகி விடுவார்கள். நீங்கள் நிம்மதியாக தொழிலில் முன்னேறலாம். உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களால் ஏற்பட்ட சில அவமதிப்புகள் சரியாகும். மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்கும். அவற்றை சுப காரியங்களுக்குப் பயன்படுத்துவீர்கள்.  பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களை குறை கூறியவர்கள் விலகிச் செல்வார்கள். உங்களின் மனநிலையைப் புரிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு மனதில் இருந்த சந்தேகங்கள் தீரும். பெற்றோர்கள் உங்கள் தேவைகளை உணர்ந்து பூர்த்தி செய்வார்கள். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு பேசி வந்தவர்களும் விலகிச் சென்று விடுவார்கள். கட்சி உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை கொடுக்கும். கலைத்துறையினர் உங்களின் திறமையை புரிந்து கொள்ளாமல் உதாசினப்படுத்தியவர்கள், உங்களைப் புரிந்து கொண்டு வாய்ப்பு தருவார்கள். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். மூலம்: இந்த குருப் பெயர்ச்சியில் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள்.  பூராடம்: இந்த குருப் பெயர்ச்சியில் கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.  உத்திராடம்: இந்த குருப் பெயர்ச்சியில் பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும். பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் நவகிரக குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபட தூக்கத்தில் இருக்கும் பிரச்னைகள் முடிவுக்கு வரும்.மகரம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: உதவி கேட்டு வருபவர்களுக்கு உடனே உதவும் குணமுடைய மகர ராசி அன்பர்களே, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் மூலம் அவரது பார்வை தைரிய ஸ்தானம், பஞ்சம் பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது.  குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு பலப்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சென்று சந்தோஷ தருணங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களால் உண்டான சில கருத்து வேறுபாடுகள் மறைந்து வாழ்வில் நிம்மதி பிறக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். தொழில் - வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். வாழ்க்கைத் துணையின் வழியிலும் சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வியாபாரங்களில் தைரியமாக உங்கள் யோசனைகளைச் செயல்படுத்துவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய வேலைக்காக அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல பதில் வரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைப்பதால் உங்களால் அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிக்க முடியும்.  பெண்களுக்கு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உங்களுக்கு வந்து போகும். அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.  மாணவர்கள் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது கவனமாக சென்று வரவும். தொழிலுக்கான படிப்புகள் பயில விரும்புவோர் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.  அரசியல் துறையினருக்கு கட்சிப்பணிகளுக்காக ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியும் வரலாம். முக்கியஸ்தர்கள் உங்களை வாழ்த்துவார்கள்.  கலைத்துறையினருக்கு சிலரின் தொந்தரவுகளால் மனம் அவ்வப்போது வெறுமை அடையும். வெளிப்புறப் படப்பிடிக்கு சென்று வருவீர்கள். நட்சத்திரப் பலன்கள். உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்: இந்த் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட காலமாக மனத்தில் இருந்து வந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். பணப்புழக்கத்தில் திருப்திகரமான நிலை இருந்து வரும். வாகனவசதிகள் சிலருக்கு அமையக்கூடும். மாண்வமணிகள் சிறப்பான முன்னேற்றம் பெற்று சாதனை படைக்கக்கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறும். அவ்வப்போது ஏற்படக் கூடிய சிறு சச்சரவுகளைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவதே நன்மை தரும். உடல் நிலையில் பிரச்னை எதுவும் இராது என்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். வங்கிகள், வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்களும், மின்சாரம் தொடர்பான இடங்களில் பணிபுரிபவர்களும் எச்சரிக்கையாய் செயல்பட்டு வருவது நல்லது. பெண்களால் சிலர் அனுகூலம் அடைய இடமுண்டு. சகோதர வழியில் மனக்கசப்புகள் நேரலாம். திருவோணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெரும்பாலான விருப்பங்கள் நிறைவேறக் கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இதுவரை திருமணம் தள்ளிப்போய் வந்தவர்களுக்கு இப்போது நல்ல முறையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. சிலர் மகப்பேறு பாக்யத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் உங்கள் மனைவியின் பெயரில் தொழில் அல்லது வியாபாரத்தைத் தொடங்கி உபரி வருமானத்தைப் பெறக்கூடும். எல்லாவகையிலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நிலை உண்டு. வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரும் போது எதிலும் கவனமாக இருப்பது அவசியம். அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் ஆதாயம் கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலையில் உயர்நிலை அடையும் வாய்ப்பு உண்டு. அரசு வழியில் எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவாக அமையும். கலைஞர்களில் சிலர் விருதுகளைப் பெறக்கூடிய நிலை உண்டு. பெண்களால் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எல்லா வகையிலும் பலரும் பொறாமை கொள்ளும் வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களில் சிலர் விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகி ஏதேனும் தொழில் தொடங்குவீர்கள். பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சிவபெருமானை வழிபட பணம் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.கும்பம்:  கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: வேகத்துடன் விவேகத்தையும் கடைபிடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இது நாள் வரை ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் இருந்த குருபகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி வருகிறார். அவர் அங்கிருந்து ஐந்தாம் பார்வையாக தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுகஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாமிடமான ரண, ருண, ரோக , சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் வண்டி, வாகனம் உங்கள் விருப்பம்போல் அமையும். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்தவர்கள் கூட இப்போது உடல்நிலையில் முன்னேற்றம் அடைவார்கள். கடன்களை முற்றிலுமாக அடைத்து விடுவீர்கள். எதிர்கள் உங்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள். சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து புதிய வீடு கட்டுவீர்கள். தொழிலில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல லாபத்தை காண முடியும். அதற்காக இரவு - பகல் பார்க்காமல் உழைக்க வேண்டி வரலாம். சிறு தொந்தரவுகள் கூட வியாபாரத்தில் இருக்காது.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலை காரணமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிவந்தால் ஒப்புக் கொள்ளுங்கள். அது உங்கள் எதிர்கால நன்மைக்காகவே. நீங்கள் கேட்காமலேயே சலுகைகள் தானாகவே கிடைக்கும். சிலர் பொறாமைப் படும் அளவிற்கு வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகமாக செல்வாக்கு அலுவலகத்தில் காணப்படும். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கவிதைப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். வெற்றியும் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் உங்களுக்கு மரியாதை உயரும். நிறைய அனுபவங்களால் மனம் பக்குவப்படும். தொண்டர்களிடேயே நல்ல மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெற்று ஆசியும் கிடைக்கப்பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நட்சத்திரப்பலன்கள்: அவிட்டம் 3, 4ம் பாதங்கள்: இந்த குருப் பெயர்ச்சியில் தொழில் வியாபாரம் ஏற்ற இரக்கமாக இருக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரலாம். மாணவமணிகளும்,. கலைஞர்களும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக்கூடும். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். தொலை தொடர்பு செய்திகள் இனிமையானதாக இருக்கும்.  சதயம்: இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வித சங்கடமும் வராது. தேவைகள் இல்லாமல் கடன் பெறுவதை தவிர்க்கவும். பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்: இந்த குருப் பெயர்ச்சியில் சிறு சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுகிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு காணப்பட்டாலும், பேச்சு வார்த்தை மூலம் சரி செய்துவிடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள். - பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முன்னோர்களை வழிபட வேலையில் இருக்கும் பிரச்ச்சனைகள் அனைத்தும் தீரும்.மீனம்: கிரகநிலை: அக்டோபர் - 04 - 2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: மனக்கஷ்டத்தை வெளியில் காட்டாத மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசியாதிபதியான குருபகவான் இது நாள் வரையில் அஷ்டம குருவாக உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்ந்திருந்தார். இனி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம் குருபகவான் உங்கள் ராசியையும், தைரிய வீர்ய ஸ்தானத்தையும் மற்றும் பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் இளைய சகோதரி சகோதரர் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்காக அவர்கள் எதையும் விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஒன்பதாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கும் அவரால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய புண்ணியங்களையும், புத்தியையும், புத்திர பாக்கியத்தையும் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் செய்து வாருங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தந்தை வழி தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் புதிய வேலை தேடுவது, வெளிநாட்டிற்கு செல்வது அனைத்துமே இனி உங்களுக்கு சாதகமாக நடக்கும்.மேலிடத்தில் பாராட்டு, பதவி உயர்வு இவை அனைத்தையும் குருபகவான் உங்களுக்கு அளிப்பார். பெண்களுக்கு... அனைவரின் பாராட்டும், அன்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது குருபகவானின் பார்வையால் அது நடக்கப்போகிறது. மாணவர்கள் சங்கீதத்தில் நாட்டம் உள்ளவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு சென்று விடுவர். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவும், செல்வாக்கும் கிடைக்கப் பெறுவீர்கள். நிர்வாகத்திறமையில் எந்த பிரச்சினைகளும் வராது. கலைத்துறையினர் அனுபவமிகுந்தவர்களின் அறிவுரையின் பெயரிலேயே நீங்கள் நன்மை அடைவீர்கள். நல்ல வருமானம், புகழ் அனைத்தும் அதிகரிக்கும்.  நட்சத்திரப் பலனகள்: பூரட்டாதி 4-ம் பாதம்: இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகஸ்தர்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத தனலாபத்தைப் பெறுவீர்கள். உத்திரட்டாதி: இந்த குருப் பெயர்ச்சியில் சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் கவனம் தேவை. ரேவதி: இந்த குருப் பெயர்ச்சியில் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பணவரவில் தடை இருக்காது.  பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் சித்தர்களை வழிபட திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

newstm.in

Trending News

Latest News

You May Like