1. Home
  2. ஜோதிடம்

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. மனக்கவலை குறையும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் தடைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.

மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் நன்மைகள் வந்து சேரும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்க செய்வார். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டு விடுவார்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும்.

பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும்.

பிரச்சனைகள் குறையும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் உங்கள் அணுகுமுறையில் நிதானம் இருக்கும். வீண்கவலை நீங்கும். உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள்.

சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகளுக்கு தடைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி

பரிகாரம்: கல்யாண கோலத்தில் இருக்கும் வெங்கடாஜலபதியை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனிப்பீர்கள்.

அலுவலக வேலைகளில் தாமதம் அகலும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். சுபகாரியங்கள் சம்பந்தமான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர் காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.

பெண்கள் எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் மகிழ்சி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உடற்சூடு ஏற்படலாம், கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

பரிகாரம்: ஈஸ்வரனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் பணவரவு வரும். சுபச்செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. ஆவனங்களை முறையாக கவனித்து வாங்குவது சிறந்தது. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளின் வாதத்திற்மை வெளிப்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும். பெண்களுக்கு முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

கலைத்துறையினருக்கு உங்கள் திறமைகள் பளிச்சிடும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

பரிகாரம்: சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனகுழப்பம் தீரும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் எதிர்ப்புகளை சமாளித்து வாழ்வில் ஏற்றம் காண்பீர்கள். எதிலும் பயம் அகலும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடை தாமதம் நீங்கும். சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க முடியும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும்.

கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை அகலும். உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். கலைத்துறையினருக்கு சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஜீரணகோளாறு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

பரிகாரம்: மாரியம்மனுக்கு வேப்பிலை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் மீண்டும் வேகம் பெறும். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்துடன் விவேகத்துடன் செய்வது நல்லது. நீண்ட நாட்களாக தீட்டி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் இறுக்கமான சூழ்நிலை அகலும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மேலிடத்துடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். பெண்களுக்கு எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வாக்குவன்மை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

பரிகாரம்: சித்தர்கள் சன்னிதிக்குச் சென்று வணங்க மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயங்கம் காட்ட மாட்டீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். பெண்களுக்கு அடுத்தவர் கூறும் கருத்துக்களில் நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு பண விவகாரங்களில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைக்க மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் புத்தி தெளிவு ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கலக்கம் நீங்கி மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.

விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். பெண்களுக்கு திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். வயிற்று கோளாறு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வணங்குவது மனோ தைரியத்தை தரும். எதிர்ப்புகள் விலகும்.

இந்த வாரம் (மார்ச் 28 - ஏப்ரல் 03 ) உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?

இந்த வாரம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனத்தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். பல வழிகளிலிருந்து பணம் வரும்.

தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்தில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும்.

பெண்களுக்கு எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். உடல் ஆரோக்கியத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

Trending News

Latest News

You May Like