ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து அசத்திய சென்னை விமான நிலையம்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் முதல் தெய்வம் இயற்கை தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் உலகை இயங்க வைக்கும் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் நாள் தைத்திருநாளாம் முதல்நாள். இறைவனை நினையாதவர்கள் கூட இந்நாளில் சூரியனை வழிபடுவார்கள்.
தைத் திருநாளை வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் பயணிகளுக்கு, விமான நிலைய ஊழியர்கள் சர்க்கரைப் பொங்கல் கொடுத்து பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்கள். இது பயணிகளுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்தது.
newstm.in