ஈரானில் விமான விபத்தில் 180 பேர் பலியான துயரம்! அமெரிக்கா போர் துவக்கமா?
ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமானி விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் ஊழியர், பயணிகள் என 170 பேருடன் புறப்பட்டது.
விமானம் தரையில் இருந்து எழுந்து மேலே புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.
போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா ? என்று விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இது தொழில்நுட்பக்கோளாறு கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈராக் - அமெரிக்கா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகிய இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 170 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in