1. Home
  2. விளையாட்டு

உலகக்கோப்பையில் ஓர் டி - 20: களம் இறங்கும் இலங்கை - பாகிஸ்தான்!

உலகக்கோப்பையில் ஓர் டி - 20: களம் இறங்கும் இலங்கை - பாகிஸ்தான்!

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மழை காரணமாக, 20 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை - பாக்., இடையிலான ஆட்டம், டி - 20 பாணியில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால், இன்று நடைெபறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்வதால், போட்டி துவங்குவதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இலங்கை - பாக்., அணிகள் மோதும் இன்றைய போட்டி, 50 ஓவர்களுக்கு பதிலாக, 20 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, இன்று இரவு, 8:49 மணிக்கு போட்டி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில், முதல் முறையாக, டி - 20 பாணியில் இன்றை போட்டி நடைபெறவுள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை காண, மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like