சர்வதேச கால்பந்து விருதுகள்: ரொனால்டோ, க்ரீஸ்மென், ம்பாப்பே தேர்வு!
சர்வதேச கால்பந்து விருதுகளில் ஆடவருக்கான இறுதி பட்டியலில், போர்ச்சுகல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கோப்பையை வென்ற பிரஞ்சு வீரர்கள் க்ரீஸ்மேன் மற்றும் ம்பாப்பே ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
போர்ச்சுகல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது இத்தாலி நாட்டின் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தால், அந்த அணி சாம்பியன் படம் வென்றது. சிறப்பாக விளையாடி பல கோல்கள் அடித்த ரொனால்டோ, இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பையை கைப்பற்றிய பிரென்ச் அணியின் நட்சத்திர வீரர்கள் க்ரீஸ்ட்மேன் மற்றும் ம்பாப்பே ஆகியோரும் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 3ம் தேதி துபாயில் நடைபெறும் விழாவில், வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
newstm.in
newstm.in