வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு வங்கதேசம் ஆல்அவுட் ஆனது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து, களமிறங்கி விளையாடிய வங்கதேச அணியினர் இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் 43, மோமினுல் 37, லிட்டன் தாஸ் 21 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 3, உமேஷ், இஷாந்த், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
newstm.in
newstm.in