1. Home
  2. விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து

சீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சோச்சுவோங் 21-12, 13-21,19-21 என்ற செட்கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். இதையடுத்து, இந்த தொடரில் இருந்து சிந்து வெளியேறினார்.

முன்னதாக, இந்தியா வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை புசனன் ஓங்பாம்ருங்பானிடம் 10-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

நாக்அவுட் சுற்று போட்டிகளில் பெண்கள் பிரிவில் இருவரும் வெளியேறியதால், சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரை வெல்லும் வாய்ப்பு கனவாகிபோனது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like