நீங்கள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளரா..? இதோ வங்கியின் அதிரடி சலுகைகள்!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐயில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ரூ.25,000க்கும் அதிகமாக வங்கிக்கணக்கில் இருப்புத்தொகை வைத்திருப்பவருக்கு ஏடிஎம்-இல் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை(Unlimited Transaction) வழங்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ வங்கி பணப்பரிவர்த்தனை நிபந்தனைகள் மற்றும் அதற்கான அபராத கட்டணங்கள்:
► மெட்ரோ நகரங்களில் வழக்கமாக ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக்கொள்ளலாம்.
► மெட்ரோ அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
► மேற்குறிப்பிட்டதை தாண்டி, அதிகமுறை பணம் எடுப்பவருக்கு ரூ. 5 முதல் ரூ.20 வரை + ஜிஎஸ்டி அபராத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
► வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு சலுகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முழுவதும் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால், அவர்கள் நடப்பு மாதத்தில் எஸ்.பி.ஐ & எஸ்.பி.ஐ குரூப் ஏடிஎம்-இல் எவ்வளவுமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
► ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
► எஸ்.பி.ஐ வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்க்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும்.
► வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருப்பவருக்கு எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.
► எஸ்.பி.ஐயில் வேலை ஊதியம் வரும் வங்கிக்கணக்கிற்கும்(Salary Account) அனைத்து ஏடிஎம்-களிலும் வரையற்ற பணம் பெறும் வசதி உள்ளது.
newstm.in
newstm.in