வார இறுதி நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 343 புள்ளிகள் ஏற்றத்துடன் 36, 150 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 97 புள்ளிகள் உயர்ந்து 10,877 புள்ளிகளுடன் வர்த்தம் நடைபெற்று வருகிறது.
ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகள், ரிலையன்ஸ் நிறுவனம் போன்றவற்றின் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாகின.
newstm.in