1. Home
  2. வர்த்தகம்

வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை!

வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை!

வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச் சந்தையில் 269 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 80 புள்ளிகளும் ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காலை முறையே 343 புள்ளிகள், 97 புள்ளிகள் ஏற்றத்துடனே வர்த்தகம் தொடங்கியது.

மாலை வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 269 புள்ளிகள் உயர்ந்து, 36,077 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 80 புள்ளிகள் அதிகரித்து 10,860 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, யெஸ் பேங்க் ஆகிய வங்கிகளின் பங்குகளும், பஜாஜ் பைனான்ஸ், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை, பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like