பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்வு!
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 208.80 புள்ளிகள் உயர்ந்து, 34,065.83 புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக வர்த்தக நேர முடிவில் 34,065.92 என காணப்பட்டது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 52.80 புள்ளிகள் உயர்ந்து, 10,530.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர முடிவில் 10,534.35 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, எச்டிஎப்சி, ஐஓசி, வேதாந்தா, கெயில், பாரத் திட்டம், ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அதேபோல் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், பாரதி இன்ப்ராடெல், ஆக்ஸிஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி, எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
newstm.in