அரசு மருத்துவமனையிலும் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் விஜயபாஸ்கர்
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையிலும் அரசியல் செய்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், " கொசு கடிப்பதற்கு முன் உள்ளாட்சித்துறையின் பணி, கொசு கடித்த பிறகு மருத்துவத்துறையின் பணி என்றும், உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகதான் கூறியதாகவும், நான் கூறிய கருத்தில் தவறில்லையே என விளக்கம் அளித்தார்.
மேலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளதாகவும், டெங்குவால் உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் 5 நிமிடம் இருந்துவிட்டு மர்ம காய்ச்சல் இருப்பதாக தவறான தகவலை எதிர்க்கட்சி தலைவர் தருவதாகவும், அரசு மருத்துவமனையிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும் விமர்சித்தார்.
Newstm.in
newstm.in