பிரதமர் தமிழகம் வந்ததால் அதிமுக வெற்றி: இல.கணேசன்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
Oct 24, 2019, 19:55 IST
| பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,551 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 81,647 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஓமலுரில் பேட்டியளித்தார்.
newstm.in
newstm.in