Logo

தீய சக்திகளின் கையாளாக பா.ரஞ்சித் செயல்படுகிறாரா?: ஹெச்.ராஜா சந்தேகம்

எஸ்ரா.சற்குணம், மோகன்.சி.லாசர்ஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கையாளாக இயக்குநர் பா.ரஞ்சித் செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது என்று, திருப்பூரில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார்.
 | 

தீய சக்திகளின் கையாளாக பா.ரஞ்சித் செயல்படுகிறாரா?: ஹெச்.ராஜா சந்தேகம்

எஸ்ரா.சற்குணம், மோகன்.சி.லாசர்ஸ் உள்ளிட்ட மதமாற்றும் தீய சக்திகளின் கையாளாக இயக்குநர் பா.ரஞ்சித் செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

பா.ரஞ்சித் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என பேசி வருகிறார் என்ற அவர், ரஞ்சித்தின் படங்களை மக்கள் புறக்கணித்து அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ‘மலைவாழ், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்கள் மலைவாழ் மக்கள், கிராம மக்கள், கல்வி அறிவு பெறுவதை எதிர்ப்பவர்கள்’ என்றார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP