Logo

பாலியல் வல்லுறவால் பெண் மருத்துவர் கொலை!  அதிர வைத்த குற்றவாளிகள்!

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பொதுமக்களிடையே பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாட்டையே உலுக்கியிருக்கிறது இளம்பெண் மருத்துவர் ப்ரியங்காவின் மரணம்.
 | 

பாலியல் வல்லுறவால் பெண் மருத்துவர் கொலை!  அதிர வைத்த குற்றவாளிகள்!

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பொதுமக்களிடையே பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாட்டையே உலுக்கியிருக்கிறது இளம்பெண் மருத்துவர் ப்ரியங்காவின் மரணம்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ப்ரியங்காவை நான்கு பேர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் சிக்கியது எப்படி என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் வசித்து வந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி,  இரு தினங்களுக்கு கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவரின் கொலை சம்மந்தமாக போலீசார் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.  அதில் 3 பேர் 18 வயதுக்கு குறைவான மைனர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அதில் முகமது பாஷா என்பவர் லாரி ஓட்டுனர். மற்ற மூவரும் க்ளீனர்கள் ஆவர்.

பிரியங்காவின் இரு சக்கரவாகனத்தை முன்பே திட்டமிட்டு பஞ்சர் செய்த இவர்கள் உதவி செய்வது போல் நடித்துள்ளனர். ஆனாலும் அவர்களை பிரியங்கா நம்பாததால் தன் செல்போன் எண்ணை ஆரிப் என்ற அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர் கொடுத்துள்ளார். இடையில் ஒரு தடவை பிரியங்கா தனது செல்போனில் இருந்து அந்த நம்பருக்கு ஒருமுறை அழைத்துள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டே போலீசார் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP