Logo

ஓபிஎஸ்சை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை: ஆடிட்டர் குருமூர்த்தி

ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
 | 

ஓபிஎஸ்சை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை: ஆடிட்டர் குருமூர்த்தி

ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார். 

திருச்சியில் நேற்று நடைபெற்ற துக்ளக் நிகழ்ச்சியில் பேசிய அவர், நீங்கள் எல்லாம்  ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டதாக கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில், "ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்றும் அதிமுகவினர் ஏன் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் கேட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தோரில் எனக்கு ஓபிஎஸ் மேல்தான் அதிக மரியாதை. முன்னும், பின்னும் என்ன கூறினேன் என்பதை குறிப்பிடாமல் திரித்து பரப்புவது கண்ணியமல்ல என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP