இரட்டை இலையை தோற்கடிக்க யாரும் பிறக்கவில்லை: தம்பிதுரை
4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும், இரட்டை இலையை தோற்கடிக்க உலகத்தில் யாரும் பிறக்கவில்லை எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Apr 10, 2019, 15:50 IST
| இரட்டை இலையை தோற்கடிக்க உலகத்தில் யாரும் பிறக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் காணியாளம்பட்டியில் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக வேட்பாளருமாக தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக கூறும் ஸ்டாலின் அதை நிரூபிக்க தயாரா? என்றும் நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார் எனவும் கூறினார். மேலும் ஸ்டாலின் நிரூபிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார்.
மேலும், 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும், இரட்டை இலையை தோற்கடிக்க உலகத்தில் யாரும் பிறக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
newstm.in
newstm.in