குரூப்-4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி
குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Nov 26, 2019, 01:10 IST
| குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-4 பிரிவில் மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6,491இல் இருந்து 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு பாடத்திட்டம் குறித்து கருத்துக் கேட்க டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்துள்ளது. இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இணையதளத்தில் தேர்வர்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
newstm.in
newstm.in