கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!
தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Dec 2, 2019, 00:51 IST
| தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in
newstm.in