வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே 1 லட்சம் மதிப்புள்ள கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை, பாப்பாபட்டி சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன்( 42) இவர் தனது காரில் காலையில் வெளியே சென்று விட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. கார் தீ பிடித்ததில் அருகில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல்நிலைய போலீசார், எடப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
newstm.in
newstm.in