ரூ.500 கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக்க முயன்றவர் கைது!
சென்னை கொத்தவால் சாவடி அருகே கோடக் மகேந்திரா வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ளநோட்டு செலுத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Nov 7, 2019, 15:50 IST
| சென்னை கொத்தவால் சாவடி அருகே கோடக் மகேந்திரா வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரத்தில் கள்ளநோட்டு செலுத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொத்தவால் சாவடியில் கோடக் மகேந்திரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு பணம் செலுத்தும் இயந்திரத்தில் சந்திர பிரகாஷ் கன்காரியா என்பவர் ரூ. 2,500 மதிப்புடைய 5 (ரூ.500) கள்ளநோட்டுகளை பணம் செலுத்தும் இயந்திரத்தில் செலுத்தியுள்ளார். இது குறித்து கோடக் மகேந்திரா வங்கி கிளை மேலாளர் ஷேக் சுலைமான் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்திரபிரகாஷ் கன்காரியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in