Logo

நடத்துநருடன் காவலர் வாக்குவாதம்: அதிர்ச்சியில் உயிரிழந்த நடத்துநர்!

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

நடத்துநருடன் காவலர் வாக்குவாதம்: அதிர்ச்சியில் உயிரிழந்த நடத்துநர்!

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து விருத்தாசலம் அருகே வந்தபோது, காவலராக பணிபுரியும் பழனிவேல் என்பவர் பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து, பேருந்து நடத்துநர் கோபிநாத், பழனிவேலிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறியபோது, காவலர் பழனிவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அப்போது, நடத்துநர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பயணிகள் அவரை எழுப்பிய போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்துநர் நெஞ்சுவலியால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP