பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் குவாரி இயக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி
பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் குவாரி இயக்க அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
Nov 16, 2019, 15:45 IST
| பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் குவாரி இயக்க அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும், மீண்டும் குவாரியை இயக்க அனுமதி கோரியும் பிஆர்.பி கிரானைட்ஸ் பங்குதாரர் செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதே கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளதை குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, குவாரியை இயக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Newstm.in
newstm.in