குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் ரூ.15 ஆயிரம்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழைத்தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தாா்.
Jan 12, 2020, 00:40 IST
| குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழைத்தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தாா்.
குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுகிறது. எனவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாயாருக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தாய்மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 12-ம் வகுப்பை முடிக்கும் வரை இந்த நிதியுதவி வழங்கப்படும்.இந்த பணம் தாயாரின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதன்மூலம் 42 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 82 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர்.
newstm.in