28 நாட்களாக கடலில் சிக்கியிருந்த நபர் உயிருடன் மீட்கப்பட்டார் !
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் (ஏ & என்) ஷாஹித் ட்வீப்பில் வசிக்கும் அம்ரித் குஜூர், என்பவர் மளிகைப் பொருட்கள் மற்றும் குடிநீர் போன்ற அன்றாட பொருட்களுடன்வணிகத்திற்காக கப்பல்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.
செப்டம்பர் 28 அன்று, குஜூரும் ஒரு நண்பர் திவ்யராஞ்சனும் ஏ & என் நிறுவனத்திலிருந்து இந்தியப் பெருங்கடலில் கப்பல்களுடன் வர்த்தகம் செய்ய புறப்பட்டனர்.
அப்போது கடலில் எழுந்த புயல் காரணமாக அவர்கள் சென்ற படகு வழக்கமான கடல் வழியிலிருந்து விலகிச் சென்றது. 28 நாட்களாகியும் இருவரும் கரைக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை அம்ரித் குஜூர் நீந்தி கரை சேர்ந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குஜூரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவரது நண்பர் திவ்யராஞ்சன் உணவு இன்றி 28 நாட்களாக தொடர்ந்து கடல் நீரை அருந்தியதால் உயிரிழந்ததாக அம்ரித் குஜூர் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in