கடும் பனிப்பொழிவு:மூடப்பட்ட ஜம்மு -ஸ்ரீநகர் நெடுஞ்சாலை!
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீரின் வடக்கு பகுதிகளில் இன்று காலையும் கடும் பனிப்பொழிவு நீடித்தது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு முக்கிய போக்குவரத்துத் தடமான ஜவஹர் சுரங்க வழிப்பாதையும் பனிச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 4 பேரை தேடும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in