ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு - நாளை ஒத்திவைப்பு!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.
ஐ.என்.எக்ஸ்மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசின் துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா காஷ்மீர் வழக்கில் ஆஜராக சென்றதால் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Newstm.in
newstm.in