போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் இயக்கத்தை நிறுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்
அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் சர்ச்சைக்குரிய போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதை நிறுத்துவதற்கான கால கெடுவை நீட்டித்துள்ளது
Apr 1, 2019, 18:31 IST
| அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் சர்ச்சைக்குரிய போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதை நிறுத்துவதற்கான கால கெடுவை நீட்டித்துள்ளது.
இந்தோனேசியாவிலும், எத்தியோபியாவிலும் விபத்துக்களில் சிக்கியதால் உலகின் பல விமான நிறுவனங்களும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதை நிறுத்தின.
அமெரிக்காவின் டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏப்ரல் 20 முதல் அந்த ரக விமானங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில் அதை மே மாதத்துக்கு அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.
newstm.in
newstm.in