Logo

ஈரான் தற்கொலைப்படை தாக்குதலில் 4 போலீசார் பலி

ஈரானில் சபாஹர் துறைமுகப் பகுதியில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.
 | 

ஈரான் தற்கொலைப்படை தாக்குதலில் 4 போலீசார் பலி

ஈரானில் சபாஹர் துறைமுகப் பகுதியில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். 

ஈரான் நாட்டின் சபாஹர் துறைமுக நகரில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த வாகனம் காவல்துறை அலுவலகத்திற்குள் நுழைந்தது. அதனை போலீசார் வழிமறிக்கவே, அந்த வாகனம் வெடித்து சிதறியது. காரில் இருந்த பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலில் முதற்கட்டமாக இரண்டு போலீசார் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP