Logo

இந்த அறிகுறிகள் இருந்தால் , உங்கள் வீட்டிலும் , உங்களிடமும் கெட்ட சக்தி இருக்கிறது என்று அர்த்தம் !!

 | 

இவ்வுலகில் நல்லது ஒன்று இருந்தால் , கெட்டது ஒன்று இருக்கும் இது தான் உலக நீதி. உங்கள் வீட்டில் கெட்ட சக்தியானதோ , அல்லது உங்களிடமோ குடிகொண்டு இருக்கின்றது என்பதை எப்படி கண்டறிய முடியும் என்பதை காண்போம்.

உங்கள் குலதெய்வமானது குடிகொண்டிருக்கும் இடம் என்றால், அது உங்களுடைய நில வாசப்படி என்று சொல்லலாம். ஒருவருடைய கால்கள் தொடர்ந்து நிலையிலோ அல்லது அங்கு இருக்கும் படிக்கட்டிலோ, இடி பட்டு கொண்டே இருந்தாலும்,

ஒருடைய தலை வாசல் படியில், இடித்துக் கொண்டே இருந்தாலும், அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதை குலதெய்வம் அவருக்கு வலியுறுத்துவதாக அர்த்தம். அடிக்கடி குறிப்பாக கால் கட்டை விரலில், நில வாசப்படியில் இடித்துக் கொள்வார்கள்.

கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா, அவங்களுக்கே தெரியாம ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி இருப்பாங்க. அடுத்ததாக, ஒரு மனிதனின் நிம்மதியான தூக்கம் கெடும். தொடர்ந்து உடல் சோர்வினால் தோல்வியை மட்டுமே சந்தித்து வருவார்கள்.

அவங்க வீட்டிலேயும் சரி , அவங்க மேலேயும் சரி , ஒரு வித்தியாசமான கெட்ட வாடை வீச ஆரம்பிக்கும். வீட்ல இருக்கிற உடையக்கூடிய பொருட்கள், அடிக்கடி கீழே விழுந்து உடைந்து கொண்டே இருக்கும்.

எடுத்துக்காட்டாக, கண்ணாடி பொருட்கள் கணவன் மனைவிக்குள் உங்கள், வாழ் நாளில் இல்லாத ஒரு சண்டை உருவாகி, அன்னியூன்னியத்தை கெடுத்துவிடும். சிலபேர் வீட்ல ஒரு பல்லி கூட இருக்காது.

இதுவும் அபசகுண குறியீடு தான். மனம் பலவீனம் அடைந்து, எந்த ஒரு செயல்பாட்டிலும், சுறுசுறுப்பாக ஈடுபடாமல், நிம்மதியாக தூங்கவும் முடியாமல், ஒரு சோம்பேறித்தனம் நம் உடம்புக்குள் புகுந்து ஆட்டிப்படைக்கும்.

உடல் எரிச்சல் ஏற்படும். இது எல்லாவற்றையும்விட, உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்தீர்கள் என்றால், காற்று வீசவில்லை என்றாலும், அந்த சுடரானது நின்று எரியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஒரு முறை இரண்டு முறை ஏற்பட்டால், பயம் தேவையில்லை. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பட்சத்தில் உங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை கணித்து விடலாம்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP