Logo

அவநம்பிக்கைக்கு இறைவன் செவி சாய்ப்பானா?

படைத்த இறைவனுக்கு தெரியும் நம்மை காக்க. ஆனால் நம்பிக்கையோடு வேண்டும் வேண்டு தல்களுக்கு செவிசாய்க்கும் இறைவன் அவ நம் பிக்கையான விஷயங்களுக்கும் செவி சாய்க்க வேண்டும்...
 | 

அவநம்பிக்கைக்கு  இறைவன்  செவி சாய்ப்பானா?

நண்பர்கள் மூன்று பேர் இருந்தார்கள். மூவரும் கடுமையான உழைப்பாளிகள். இறைவனிடத்தில் அன்பு கொண்டவர்கள். ஆனால் ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான அன்பை இறைவனிடம் கொண்டிருந்தார்கள். முதலாமவனுக்கு எல்லாமே இறைவனே கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும்.அதே நேரம் இறைவன் மீது பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை.

இரண்டாமவனுக்கு நாம் செய்வதைச் செய்வோம். இறைவன் பார்த்துக்கொள்வான் என்னும் எண்ணம் உண்டு. மூன்றாமவனுக்கு  எப்போதும் யாரையும் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும். அது போலவே உழைப்புக்கேற்ற பலனை மட்டும் இறைவன் கொடுத்தாலே போதும் என் றும் நினைப்பான்.

ஒருமுறை மூவரும் காட்டுப்பகுதியைத் தாண்டி பக்கத்து ஊருக்கு சென்றார்கள். திரும்பி வரும்போது  காட்டுப்பகுதியில் மாட்டிக்கொண்டார்கள். நல்ல மழை வேறு. கும்மிருட்டில் மனதுக்குள் மெல்ல அச்சம் எட்டிப்பார்த்தது. இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணினான் முதலாம வன். மனம் முழுவதும் அபாயமணி அடித்துக்கொண்டே இருந்தது அவனுக்கு.

அடர்த்தியான காடு என்பதால் நிச்சயம் மிருகங்களின் நடமாட்டம் இருக்கும் அதனால் இருளில் செல்வது பாதுகாப்பானது அல்ல. இங்கிருப்பதும் பாதுகாப்பானது அல்ல என்றான் முதலாமவன். நீ சொல்வது சரிதான். அதேநேரம் மிருகங்கள் நடமாடாத இடத்தை தேடி தான் இரவு முழுவதும் கழிக்க வேண்டும் அதுதான் பாதுகாப்பும் கூட என்றான் இரண்டாமவன். இருவருமே சரியாகத் தான் சொல்கிறீர்கள். முதலில் இங்கிருந்து பாது காப்பாக செல்ல சிறு ஒளியாவது வேண்டும் என்றான்.

ஒருவழியாக மூவரும்  இருளில் காட்டைக் கடப்பதை விட காட்டில் தங்கியிருந்து  மறுநாள் போவது தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத் தார்கள். அடர்ந்த மரத்தின் கிளைகளைப் பற்றியபடி இருந்தார்கள். நள்ளிரவு நேரம்  பசி ஒருபுறம். அச்சம் ஒருபுறம் என்று ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.தூரத்தில் சிறுத்தையின் உறுமல் கேட்டது.

நேரம் செல்ல செல்ல உறுமல் சத்தம் பக்கத்தில் கேட்க தொடங்கியது. இன்று மூவரும் சிறுத்தைக்கு பலியாக போகிறோம் என்றான் முதலாம வன். இறைவன் இருக்கும் போது நமக்கெதுவும் ஆகாது என்றான் இரண்டாமவன். இறைவனை வழிபட்டு அவரை கஷ்டப்படுத்தாமல் அருகில் இருக்கும் காட்டு கோயிலின் உள்ளே சென்று விடலாம் பாதுகாப்பாக இருக்கும் என்றான். 

முதலாமவனுக்கு இறைவன் மீது நம்பிக்கையில்லை என்பதால் அவன் மரத்தின் மீதே இருந்தான். மற்ற இருவரும் வற்புறுத்தியும் அவன் இறங்கி வரவில்லை. இரண்டாமவன் கடவுளின் திருநாமத்தை உச்சரித்தப்படி கீழே இறங்கி காட்டுக்கோயிலை அடைந்தான். மூன்றாமவன் கட வுளை வேண்டி கையில் தீக்குச்சிகளோடு பதுங்கி பதுங்கி கோயிலின் உள்புறம் நுழைந்தான். என்ன துரதிஷ்டம் காட்டுபகுதியில் கோயில் இருந் ததால் உரிய பராமரிப்பின்றி கதவுகள் சாத்த முடியவில்லை. இருந்தும் மூன்றாமவன் மனம் தளரவில்லை.

இரண்டாமவன் இறைவனை நினைத்து அவர் பார்த்துக்கொள்வார் என்றான்.மூன்றாமவன் மனம் தளராமல் அருகிலிருந்த கட்டை, ஆயுதங்களை வைத்து கதவை அடைத்தான். இருவரும் பாதுகாப்பாக கோயிலுக்குள் இருந்து மறுநாள் ஊர் திரும்பினார்கள். இறைவன் மீது கொண்டிருந்த அவ நம்பிக்கையால் முதலாமவன் உயிரை இழந்தான். இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் மற்ற இருவரும்  உயிர் பிழைத்தார்கள்.

படைத்த இறைவனுக்கு தெரியும் நம்மை காக்க. ஆனால் நம்பிக்கையோடு வேண்டும் வேண்டுதல்களுக்கு செவிசாய்க்கும் இறைவன் அவ நம் பிக்கையான விஷயங்களுக்கும் செவி சாய்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா என்ன? 

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP