சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இரண்டே நாளில் ரூ.2 கோடி வசூல்!!
Sep 14, 2020, 18:23 IST
சென்னையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முக்கவசம் அனியிம் விதியை மீறியவர்களிடம் இரண்டு நாள்களில் மட்டும் ரூ.2 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளான முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதவர்கள் என கடந்த இரண்டு நாள்களில் ரூ.2 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக தேனாம்பேட்டை, பெருங்குடி, அம்பத்தூரில் அதிகளவில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களின் விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.