{"vars":{"id": "106785:4629"}}

தமிழகத்தில் நாளை மொத்தம் 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!

 

கனமழை காரணமாக 24 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், சிவங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், தருமபுரி, திருச்சி, நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, மின்கலங்கள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.