ஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்
சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Nov 14, 2019, 15:30 IST
| சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல்களில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டதாக கூறினார். சர்வாதிகாரிகயாக செயல்படுவேன் என்று ஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஜனநாயக மாண்பை காப்பாற்றும் இயக்கத்தில் உள்ளோரின் நம்பிக்கைகைய ஸ்டாலின் இழந்துவிட்டதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in