Logo

மு.க.ஸ்டாலினின் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை: ராமதாஸ்

இடைத்தேர்தல் வெற்றி, பொய் வணிகருக்கு கிடைத்த படுதோல்வி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 | 

மு.க.ஸ்டாலினின் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை: ராமதாஸ்

இடைத்தேர்தல் வெற்றி, பொய் வணிகருக்கு கிடைத்த படுதோல்வி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், ‘இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். மக்கள் யார் பக்கம் என்பது நிரூபணமாகியுள்ளது. மு.க.ஸ்டாலினின் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை. சிலரை பல நாள் ஏமாற்றலாம்; பலரை சில நாள் ஏமாற்றலாம். தங்களை எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என மக்கள் நிரூபித்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவு இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும். வெற்றிக்காக உழைத்த அதிமுக, பாமக, கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP