Logo

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட பிரபலம் கைது!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பிரபலம் கைது!
 | 

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட பிரபலம் கைது!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட புகாரில் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கல் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார். 
பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினரை இழிவுபடுத்தும் வகையில் ஜோ மைக்கல் பிரவீன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இது தொடர்பாக தேசிய மகிலா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி மற்றும் அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட பிரபலம் கைது!

விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜோ மைக்கல் பிரவீனுக்கு அடையாறு மகளிர் காவல் துறையினர் 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் பெண் காவலர்களையும் ஜோ மைக்கல் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் பெண் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் கருதி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து ஜோ மைக்கல் பிரவீனை கைது சிறைக்கு அனுப்பினர்.ஜோ மைக்கேல் பிரவீன் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். நடிகையும் அழகியுமான மீராமிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP