மக்களின் மனநிலையை நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும்: கோவை சரளா
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த நடிகை கோவை சரளா, மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
Mar 8, 2019, 16:13 IST
| மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும் என நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.
நடிகை கோவை சரளா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். அவருடன் கோவை மருத்துவர் உஷா உட்பட 100 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகை கோவை சரளா, "மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மகளிர் ஆதரவு பெருகி கொண்டிருப்பதாகவும், மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும்" எனவும் தெரிவித்தார்.
newstm.in
newstm.in