Logo

 மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்

சென்னை மெரினா பீச்சில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் கல்யாணம் செய்துகொள்வதாக கூறி, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

 மெரினா பீச்சில் பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர்...அதிர்ச்சி தகவல்கள்

சென்னை மெரினா பீச்சில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் கல்யாணம் செய்துகொள்வதாக கூறி, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை எழும்புர் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் மாணவி நின்றுக்கொண்டிருந்ததை பார்த்த, குழந்தைகளுக்கான தொண்டு நிறுவன ஊழியர்கள், அவர்களை விசாரித்ததில், 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பெருங்குடியை சேர்ந்தவர் என்றும். அந்த இளைஞர் விருத்தாசலத்தையும் சேர்ந்தவர் என்றும், தாங்கள் காதலர்கள் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், அவர்களுக்கோ, மாணவியை இளைஞர் கடத்தி செல்லவுள்ளார் என்று சந்தேகம் அடைந்து, இருவரையும் தங்கள் அலுவலகளுக்கு அழைத்து சென்று, இருவரையும் தனிதனியாக விசாரணை செய்ததில், அந்த மாணவி சீரழிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். மகளிர் போலீஸ் அவர்களிடம் விசாரணை செய்ததில், அந்த மாணவி மெரினா பீச்சை சுற்றிப்பார்க்க வந்தபோது, அங்கு ஒரு கடையில் வேலைபார்க்கும் அன்பழகனை பார்த்துள்ளார். இதன்பின் அன்பழகனின் காதலில் விழுந்த அந்த மாணவி, அடிக்கடி அவனை பார்க்க பீச்சிற்கு வந்துள்ளார்.

அவர்களின் காதல் வளர்ந்த நிலையில், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அன்பழகன் கூற, மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே வந்த அந்த மாணவியிடம் அன்பழகன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதன்பிறகு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துசென்றுள்ளார். இந்த அதிர்ச்சி தகவல்களை கேட்ட போலீசார் அதிர்ந்துவிட்டனர்.
அன்பழகன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதை தொடர்ந்து, அவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP