தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில், தமிழகம், கேரளா, கர்நாடகா,குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு கடலோர பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
newstm.in
newstm.in