திருமணமான சில நிமிடங்களில் கர்ப்பமான புதுப்பெண்.. இருவீட்டாரும் அதிர்ச்சி.. ஆண் நண்பர்?
மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்ற பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 24 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. தாலிகட்டிய பின்னர் நடந்த சடங்குகளின் போது இளம்பெண்ணுக்கு வாந்தி,மயக்கம் என உடல் நிலையில் பிரச்னை ஏற்பட இரு குடும்பத்தாரும் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார்.
இது இருவீட்டார் மத்தியில் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு எங்கள் மகனை கட்டிவைத்து ஏமாற்றிவிட்டதாக மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் சண்டை போட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் தனது ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கர்ப்பமாக்கிய ஆண் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in