Logo

டாஸ்மாக்கில் பொங்கலுக்கு ரூ.475 கோடி மது விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 475 கோடி மதிப்பிலான மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த 12ம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை 475 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 | 

டாஸ்மாக்கில் பொங்கல் விடுமுறையில் ரூ.600 கோடி மது விற்பனை இலக்கு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 500 கோடி மதிப்பிலான மது விற்பனை ஆகியுள்ளது. 

வழக்கமாக தமிழகத்தில் பண்டிகை தினங்களில் டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடைபெறும். அது போன்று இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு, 15ம் தேதி தொடங்கி அரசு விடுமுறை நாளாக 19ம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்களாக உள்ளன.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ. 600 கோடிக்கு மேல் மது விற்பனையாகும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடந்த 14ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரை 500 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகை, பொங்கல் விடுமுறை முடிவதற்கு இன்னும் மூன்று தினங்கள் மீதமிருப்பதால், பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டுமே 600 கோடி ரூபாயை எட்டி விடும் என்று தகவல் தெரிவித்தார் டாஸ்மாக் அதிகாரி ஒருவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP