பொங்கல் விழா: கன்னியாகுமரி படகு சேவையின் நேரம் நீட்டிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லவதற்கான சுற்றுலா படகு சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Jan 14, 2019, 16:19 IST
| பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவை மிக முக்கிய சுற்றுலா இடமாக கருதப்படுகிறது. கடலினுள் இவைகள் அமைக்கப்பட்டுள்ளதால் படகு மூலமே சுற்றுலாப் பயணிகள் இவ்விடங்களுக்கு சென்று வருகின்றனர். இதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in