மருமகளை காப்பாற்ற உடலுறவுக்கு ஒப்புக்கொண்ட மாமியார்: அதிர்ச்சி தகவல்
மருமகளின் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற மாமியார் ஒருவர் தனது கற்பை பறிகொடுத்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் மருமகள், மாமியார் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது ஒரு திருடன் திடீரென அவர்களது வீட்டில் நுழைந்து கத்தியை காட்டி அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் திருடினான். அதன் பின்னர் மருமகளின் அழகை கண்டு அவன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது மாமியார் அவனது காலில் விழுந்து கெஞ்சி கேட்டு தன்னுடைய மருமகளை விட்டு விடுமாறு கூறினார். அப்படி என்றால் மருமகளுக்கு பதிலாக நீ என்னுடன் உறவு கொள்ள தயாரா? என்று திருடன் கேட்டதாகவும், அதற்கு அந்த மாமியார் ஒப்புக்கொண்டு திருடனுக்கு ஒத்துழைப்பு கொடுததாகவும் கூறப்படுகிறது. மருமகளின் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற தன்னுடைய கற்பை பறிகொடுத்த அந்த மாமியார் செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் வீட்டில் புகுந்து கொள்ளையடித்ததோடு பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளையனை கைது செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in