கீழடி அருங்காட்சியத்திற்கு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு: அமைச்சர்
கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சுற்றுலாத்துறை சார்பில் செய்துதரப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
Nov 2, 2019, 15:20 IST
| கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சுற்றுலாத்துறை சார்பில் செய்துதரப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கீழடி அருங்காட்சியகத்திற்கு சுற்றுலாத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார். மேலும், திருப்பரங்குன்றத்தை சுற்றுலாத்தளமாக அறிவிப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், திருப்பரங்குன்றத்தில் விரைவு ரயில்கள் நிற்க மத்திய அரசின் உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in